Wednesday, March 6, 2019

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் கோவிலின் பெருமைகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் கோவிலின் பெருமைகள்
புதுவை என்றால் நம் அனைவருக்குமே பாண்டிச்சேரிதான் நினைவுக்கு வரும்;

தமிழ்நாட்டில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு புதுவை என்ற பெயரில் ஒரு கிராமம் இருந்தது.அந்த கிராமமே பிற்காலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் என்ற பெயரில் நகரமாக மாறியது.

ஸ்ரீவில்லிபுத்தூரின் தெற்கு எல்லையில் அருள்மிகு வைத்தியநாதசுவாமி சிவகாமி அம்பாள்  கோவில் அமைந்திருக்கிறது.இந்தக்  கோவிலின் பழைய பெயரே புதுவை ஆகும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகத்தில் சிவகெங்கைத்தீர்த்தம் என்ற பெயரில் ஒரு குளம் இருக்கிறது.

ஜீரத் தேவர்  இங்கே தான் இருக்கிறார்.விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் பழமையான சிவாலயம் இது மட்டுமே!

வன்னி மரமே இந்தக் கோவிலின் தல விருட்சமாக இருக்கிறது.ஆறு அடி உயரமுள்ள நடராஜர் இங்கே தெற்கு நோக்கி இருந்து அருள்பாலித்து வருகிறார்.

Intel Powered Laptop

தமிழின் சிறப்பு

ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா?
அகரத்தில் ஓர் இராமாயணம்
இராமாயண கதை முழுதும்
'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது.
 இதுவே தமிழின் சிறப்பு

அனந்தனே
அசுரர்களை
அழித்து,
அன்பர்களுக்கு
அருள
அயோத்தி
அரசனாக
அவதரித்தான்.
அப்போது
அரிக்கு
அரணாக
அரசனின்
அம்சமாக
அனுமனும்
அவதரித்ததாக
அறிகிறோம்.
அன்று
அஞ்சனை
அவனிக்கு
அளித்த
அன்பளிப்பு
அல்லவா
அனுமன்?
அவனே
அறிவழகன்,
அன்பழகன்,
அன்பர்களை
அரவணைத்து
அருளும்
அருட்செல்வன்!
அயோத்தி
அடலேறு,
அம்மிதிலை
அரசவையில்
அரசனின்
அரியவில்லை
அடக்கி,
அன்பும்
அடக்கமும்
அங்கங்களாக
அமைந்த
அழகியை
அடைந்தான் .
அரியணையில்
அமரும்
அருகதை
அண்ணனாகிய
அனந்தராமனுக்கே!
அப்படியிருக்க
அந்தோ !
அக்கைகேயி
அசூயையால்
அயோத்தி
அரசனுக்கும்
அடங்காமல்
அநியாயமாக
அவனை
அரண்யத்துக்கு
அனுப்பினாள்.
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அந்த
அடியார்களில்
அருகதையுள்ள
அன்பனை
அரசனாக
அரியணையில்
அமர்த்தினர்.
அடுத்து
அன்னைக்காக
அவ்வானரர்
அனைவரும்
அவனியில்
அங்குமிங்கும்
அலைந்தனர்,
அலசினர்.
அனுமன்,
அலைகடலை
அலட்சியமாக
அடியெடுத்து
அளந்து
அக்கரையை
அடைந்தான்.
அசோகமரத்தின்
அடியில் ,
அரக்கிகள்
அயர்ந்திருக்க
அன்னையை
அடிபணிந்து
அண்ணலின்
அடையாளமாகிய
அக்கணையாழியை
அவளிடம்
அளித்தான்
அன்னை
அனுபவித்த
அளவற்ற
அவதிகள்
அநேகமாக
அணைந்தன.
அன்னையின்
அன்பையும்
அருளாசியையும்
அக்கணமே
அடைந்தான்
அனுமன்.
அடுத்து,
அரக்கர்களை
அலறடித்து ,
அவர்களின்
அரண்களை ,
அகந்தைகளை
அடியோடு
அக்கினியால்
அழித்த
அனுமனின்
அட்டகாசம் ,
அசாத்தியமான
அதிசாகசம்.
அனந்தராமன்
அலைகடலின்
அதிபதியை
அடக்கி ,
அதிசயமான
அணையை
அமைத்து,
அக்கரையை
அடைந்தான்.
அரக்கன்
அத்தசமுகனை
அமரில்
அயனின்
அஸ்திரத்தால்
அழித்தான்.
அக்கினியில்
அயராமல்
அர்பணித்த
அன்னை
அவள்
அதி
அற்புதமாய்
அண்ணலை
அடைந்தாள்.
அன்னையுடன்
அயோத்தியை
அடைந்து
அரியணையில்
அமர்ந்து
அருளினான்
அண்ணல் .
அனந்தராமனின்
அவதார
அருங்கதை
அகரத்திலேய
அடுக்கடுக்காக
அமைந்ததும்
அனுமனின்
அருளாலே.

உலகில் எந்த மொழியாலும் அசைக்க முடியாத நம் தமிழ்

Get upto 40% off on Cooking Essentials : Valid till : Stock Lasts


Wednesday, February 20, 2019

ஸ்ரீ சாய்பாபா

பாபாவை அணுக விசேஷமான வழி முறைகள் ஏதுமில்லை. நம் தாயை எப்படி அணுகுவோம்? இம்மாதிரி ஒரு கேள்வி கேட்பது மடத்தனமானது. அன்பு என்ன என்று குழந்தை உணருவதற்கு வெகு நாட்கள் முன்னதாகவே தாய் தன் குழந்தைகள் மீது அன்பைப் பொழிந்து வருகிறாள். அதே போல் பாபா குழந்தைகள் மீது அன்பைப் பொழியும் ஒரு கண்ணுக்குத் தெரியாத அன்னையின் பாத்திரத்தை ஏற்று, முற்பிறவிகளிலிருந்தே தொடர்ந்து தம் பக்தர்களாகிய குழந்தைகள் மீது அன்பைப் பொழிகிறார். ஆனால் அவர்கள் இப்போது பாபாவை எப்படி அணுகுவது? அவர்கள் பாபாவை அணுகவேண்டும் என மனப்பூர்வமாக விரும்பட்டும். உடனே அணுகுமுறை துவங்கிவிட்டது. அக்கணத்திலிருந்தே அவர்கள் நிலையில் முன்னேற்றம் ஆரம்பமாகிவிட்டது. அவர்கள் மேலும் மேலும் உற்சாகமடைகின்றனர், மேன்மேலும் பலன் அடைகின்றனர். முதலில் ஒரு வித நன்றியுணர்வையும், நாளடைவில் பிரேம பக்தியையும் அவர்கள் பெறுகிறார்கள். பக்தர்கள் பாபாவின் திருவுருவை தங்களிடம் உள்ள லாக்கெட்டுகள்,  படங்கள் ஆகியவற்றில் அடிக்கடி பார்த்து, பாபாவின் திருவுருவை தினமும் மனதில் கொண்டுவரட்டும், கவிஞனின் கற்பனைகள் எல்லாவற்றையும் விட திறன்படைத்த பாபாவின் அத்புத லீலைகளை [ஸ்ரீ சாய் சத்சரித்திரம்] படிக்கட்டும். பாபாவின் குணாதிசயங்களை நினைவுபெற பாபாவின் அஷ்டோத்திர சத நாமாவளி [108 நாமாக்கள்] மிக்க சக்தி வாய்ந்த சாதனம். ஆர்வமுள்ள பக்தர்கள் ஒன்று கூடி செய்யும் பூஜைகள், பஜனைகள் ஆகியவற்றில் பங்கு கொள்ளட்டும். ஆர்வமுள்ள சாதகனுக்கு பாபாவே மேற்கொண்டு உள்ள வழிகளைக் காட்டுவார். ஒவ்வொரு உண்மையான பக்தனுக்கும் பலவித வழிகளில் பாபாவுடன் மேற்கொண்டு தொடர்பு எப்படி வைத்துக் கொள்வது, அதை எப்படி வளர்த்துகொள்வது என்பது பற்றி பாபாவே உணர்த்துவார். பாபா கடைபிடிக்கும் முறைகள் பலவகைப்படும். உணர்ச்சிமிக்க துடிப்புள்ள சில பக்தர்கள் இன்றும் பாபாவைக் காண்கிறார்கள், விழிப்புடன் இருக்கும்போதே அவருடன் பேசவும் செய்கிறார்கள். சிலருக்கு கனவுகளில் இந்த அனுபவம் கிட்டுகிறது. பாபாவே தெய்வம் என்ற திடமான நம்பிக்கை கொண்ட சாயி பக்தர்கள் எண்ணற்றவர்கள், அவர்கள் தங்கள் பிரார்த்தனைகள் பாபாவால் ஏற்கப்பட்டு பலன்களைப் பெறுகிறார்கள்.- பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமி.

உப்புமா பாஸுரம்…

உப்புமா பாஸுரம்…
ஶ்ரீமடத்தில் ஒருநாள் இரவு வேளை. சில பாரிஷதர்களைத் தவிர ஒரே ஒரு பக்தர்.
பெரியவா… இவர்களுடன் ஏகாந்தமாக பேசிக் கொண்டிருந்தார்.
“ஆஹாரம் பண்ணியாச்சா?”
“ஆச்சு. பெரியவா”
“என்ன ஸாப்ட்டே?”
“உப்புமா………
“ஒனக்கு ஒரு கதை தெரியுமோ?…. உப்புமாக் கதை !….”
ஸ்வாரஸ்யம் தட்டியது.
“தெரியாது….”
“கேளு……ஒரு பக்தர் ஸ்ரீரங்கத்துக்கு போனார். பெருமாளை ஸேவிச்சார்.
ஸேவிச்சாரா?… அப்றம் ராத்ரி ஒரு சத்ரத்ல தங்கி, அங்க போட்ட உப்புமாவை
ஸாப்ட்டார்….
……என்னடான்னா……..! உப்புமா ஸெரியா வேகவேயில்ல! அதோட, சின்ன சின்னதா நெறைய
கல்லு வேற ! பல்லுல பட்டு பட்டு வாய்ல குத்தி, வாயெல்லாம்…. ஒரே புண்ணாயி…
செவந்து போச்சு.! அதோட போச்சா! ஏகப்பட்ட மொளகாயப் போட்டு தாளிச்சிருந்ததால,
கொள்ளி காரம் ! தாங்கவே இல்ல ! எல்லாமா சேர்ந்து, கண்ணால ஜலம் விட
வெச்சுடுத்து.! கண்ணெல்லாம் செவந்தே போச்சு! அந்த ஶ்ரமத்ல கூட, பக்தரோல்லியோ?
ஒரு பாட்டு ஞாபகம் வந்து பாடினாராம்..! ஒனக்கு தெரியுமோ?”
“தெரியாது பெரியவா”
அவர் வாயால் கேட்பதில் உள்ளே ஆனந்தமே தனி !
“என்ன அப்டி சொல்ற?…. பச்சை மா மலைபோல் மேனி-னு தொண்டரடிப்பொடியாழ்வார்
பாஸுரம் !”
“அது தெரியும் பெரியவா…”
“அப்போ ஸெரி. இவர் கொஞ்சம் மாத்திப் பாடினாராம்…

*பச்சைமா [வேகாத ரவை];
மலைபோல் மணி [உப்புமால இருந்த குட்டி குட்டி கல்லு];
பவளவாய் [ஸாப்ட்டவன் வாய் புண்ணாயி செவந்து போனது];
கமல செங்கண் [காரம் தாங்காம கண்ணுலேர்ந்து ஜலம் கொட்டி, கண்ணெல்லாம் செவப்பா
ஆய்டுத்தாம்];
அச்சுதா !………என் அப்பனே !……!”*

அழகாக பாடி பாடி அர்த்தம் சொல்லிக் கொண்டே வந்த பெரியவா…. மேலே பேச முடியாமல்
குலுங்கி குலுங்கி சிரிக்க, சுற்றி இருந்தவர்களும் அந்த மலர்ந்த சிரிப்பில்
மனஸை பறிகொடுத்து, சிரித்தனர்.
கள்ளமில்லாத குழந்தையின் சிரிப்பும், தெய்வக் கிழவனின் சிரிப்பும் மனஸை
அப்படியே கொள்ளையடித்துவிடுமே!

கோவில் அதிசயங்கள்!

கோவில் அதிசயங்கள்!
அந்த காலத்தில் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒன்றை தனித் தன்மையுடன் அமைத்தனர்.

ஆனால் ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு!

அவைகளில் சில:

1. உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம் – நடராஜர் கோயில்

2. கும்பகோணம் அருகே “தாராசுரம்” என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள சிற்பத்தில் வாலியும் சுக்ரீவனும் சண்டை இடும் காட்சி உள்ளது. இங்கிருந்து ராமர் சிற்பம் இருக்கும் தூண் தெரியாது. ஆனால் ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் போர் புரியும் சிற்பம் தெரியும்.

3. தர்மபுரி மல்லிகார்ஜுன கோவிலில் உள்ள நவாங்க மண்டபத்தில் இரு தூண்களின் அடி பூமியில் படியாது.

4. கரூர் மாவட்ட குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில் இரட்டை நடராஜர் தரிசனம் செய்யலாம்.

5. கருடாழ்வார் நான்கு கரங்களுள் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தரும் ஸ்தலம் கும்பகோணம் அருகே வெள்ளியங்குடி 108 திவ்யதேசத்தில் இங்குமட்டும் இது போல் காட்சி தருகிறார்.

6. நாச்சியார் கோவில் கல்கருடன் சன்னதியில் 4 பேர் தூக்குவார்கள் பின்பு 8, 16, கோவில் வாசலில் 64 பேர் தூக்கி வருவார்கள். அப்போது கருடனின் முகத்தில் வேர்வை துளிர்க்கும்.

7. ஸ்ரீபெரும்புதூரில் உள் ராமானுஜர் உருவம் விக்ரஹமோ, வேறு உலோகப் பொருளால் ஆன வடிவமைப்போ இல்லை குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைப் பொருளால் ஆனது.

8. திருநெல்வேலி-கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் கோயிலில் உள்ள வில்வமரத்தில் லிங்க வடிவில் காய் காய்க்கிறது.

9. கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் “பஞ்சவர்ணேஸ்வரர்” என்று பெயர்
Get upto 80% off on Health - Grooming : Valid till : Stock Lasts

10. விருதுநகர், சொக்கநாதன்புத்தூரில் உள்ள தவநந்திகேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்திக்கு கொம்போ, காதுகளே இல்லை.

11. ஆந்திராவில் சாமல் கோட்டை அருகே உள்ள 3 பிரதான சாலைகளில் சந்திப்பில் உள்ள 72 அடி ஆஞ்சநேயர் சிலையின் கண்களும்-சில நூறுமைகளுக்கு அப்பால் உள்ள பத்ராசல ஆலயத்தில் ஸ்ரீராமன் திருவடிகளும் ஒரே மட்டத்தில் உள்ளன.

12. வேலூர் அருகே உள்ள விருஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ள கோயில் தூணின் தென்புறம் அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6முதல் 12 வரையும் எண்கள் செதுக்கியுள்ளன மேற்புறம் உள்ள பள்ளத்தில் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியுன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுதான் அப்போது மணி ஆகும்.

13. சென்னை-திருப்பதி சாலையில் ஊத்துக் கோட்டை தாண்டி நாகலாபுரம் என்ற ஊரில் உள்ள ஸ்ரீவேத நாராயண பெருமாள் தலையிலிருந்து இடுப்பு வரை மனித உருவம், கிழே மீன் வடிவம் கொண்டுள்ளார்.

14 தருமபுரி – பாப்பாரப்பட்டி {16கிமீ} இருக்கும் ஸ்ரீ அபிஷ்டவரதர் பெருமாள் கோவிலில் நவக்கிரகங்கள் பெண் வடிவில் உள்ளது.

15 மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலில் 14 கோபுரங்கள் உள்ளன வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு கோபுரங்கள் கிடையாது.

16 கும்பகோணம் சாரங்கபாணி கோவில் கோமளவல்லி தாயாருக்கு படி தாண்டா பத்தினி என்ற பெயரும் உண்டு - பெருமாளோடு எக்காலத்திலும் வெளியே வராத காரணத்தால் தாயாருக்கு இந்தப் பட்டம் கொடுக்கப்பட்டு உள்ளது.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

திருமலையில் தங்குவதற்கு ஒரு அறை

திருமலையில் தங்குவதற்கு  ஒரு அறை கண்டுபிடிக்க கடினமாக இருந்தால், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பயன்படுத்தி கொள்ளுங்கல் நண்பர்களே .கோவிலுக்கு மிக அருகிலேயே கீழ் கண்ட மடங்கள் உள்ளன.அவற்றில் தங்கலாம்.ஹோட்டலுக்குரிய ரூம் வசதிகளோடு உள்ளன.
************
மூல் மட் மின்: 0877-2277499.
புஷ்பா மாண்டபம் ப: 0877-2277301.
ஸ்ரீ வல்லபச்சரிய ஜீ மட் பி: 0877-2277317.
உத்ததி மட் (திருப்பதி) பி 0877-2225187.
ஸ்ரீ திருமல காஷி மட் Ph-0877-2277316.

ஸ்ரீ ராகவேந்திர
ஸ்வாமி மட் Ph-0877-2277302.
ஸ்ரீ வைகனச திவ்யா சித்தன்டா
விவேர்டினினி சபை Ph: 0877-2277282.

ஸ்ரீ காஞ்சி
காமகோடி மட் மின் : 0877-2277370.
ஸ்ரீ புஷ்பகிரி மட் Ph-0877-2277419.
ஸ்ரீ உட்டாரடி மட் Ph-0877-2277397.
உடுப்பி மட் Ph-0877-2277305.

ஸ்ரீ ரங்கம் ஸ்ரீமத்
ஆத்வான் ஆசிரமம் ப: 0877-2277826.

ஸ்ரீ பரகலா ஸ்மிமி மட் பி: 0877-2270597,2277383.
ஸ்ரீ திருப்பதி ஸ்ரீமன்னாரயன
ராமானுஜா ஜீயர் மட் பி: 0877-2277301.

ஸ்ரீ சிருங்கரி சாரதா
மடம் Ph: 0877-2277269,2279435.
ஸ்ரீ அஹோபீதா மட் ப. 0877-2279440.

ஸ்ரீ திருமல
காஷி மத் தொலைபேசி: 222 77316
உடுபி மட் பி: 0877 222 77305

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீதந்தி
ராமனுஜீயர் மட் பீ: 0877 222 77301)

ஸ்ரீ காஞ்சி காமகோடி
பீட்டம் மட் / சர்வா மங்கலா கல்யாண மண்டபம் ப., 0877 222 77370)

ஸ்ரீ வல்லபச்சரிய மடம்
தொலைபேசி: 222 77317
மந்திராலயா ராகவேந்திர சுவாமி மட் / பிருன்தாவனம் ப: 0877 222 77302
ஆர்யா வைசியா சமாஜம் எஸ்.வி.ஆர்.
ஏ.வி.டி.எஸ்.எஸ்.டி: 0877 222 77436

ஸ்ரீரங்கம் ஸ்ரீமதி
ஆதித்யான் ஆஷ்ரம் ப. 0877 222 77826
ஸ்ரீ வைகநாத ஆசிரமம்: 0877 222 77282
ஸ்ரீ அஹோபில மட் பட்: 0877-2279440
ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம் / சாரதா கல்யாண மண்டபம் பி: 0877 222 77269
ஸ்ரீ வைசராஜர் மடம் மோதிலால்
பன்சிலால் தர்மசாலா ஃபீ: 0877 222 77445

ஹோட்டல் நரிலமா
சௌல்ரி பி: 0877 222 77784
ஸ்ரீ சீனிவாச சொல்ரி டி: 0877 222 77883
ஸ்ரீ ஹதிராம்ஜி மட் மின்: 0877 222 77240

கர்நாடகா விருந்தினர்
மாளிகை பி : 0877 222 77238
தக்ஷிணா இந்தியா
ஆர்யா வியா கபு முனிரட்ணம்
அறநெறிகள் பி: 0877 222 77245

ஸ்ரீ சிருங்கேரி
சங்கர நீலம் ப: 0877 222 79435
ஸ்ரீ ஸ்வாமி
ஹதிராஜ் முட்டம் ப: 0877-2220015

வயதில் மூத்த குடிமக்களும் ஜருகண்டி சொல்லித் தள்ளிடும் திருப்பதிகோவில் பாதுகாவலர்கள் இனி யாரைத் தள்ளும் என்று முழிக்கும் காலம் வந்துவிட்டது.

65 வயது கடந்த மூத்த குடிமக்கள் நாள் ஒன்றுக்கு 700 பேர் இலவசமாக தரிசனம் செய்யலாம் என்பது எப்படி?


Offer : Get upto 50% off on AmazonBasics Valid till : Stock Lasts

நிபந்தனைகள் :
----------------------------
1) ஆதார் அட்டை அவசியம்.
2) 65 வயது முடிந்திருக்க வேண்டும்
3) காலை எட்டு மணிக்கு குறிப்பிட்ட இடத்தில் அறிக்கை செய்ய வேண்டும்.
4) காலை 10 மணி முதல்
மாலை 3 மணி வரை தரிசனம் நேரம்.
5) தினம் 700 பேருக்கும் அனுமதி உண்டு.
6.) உதவி செய்வதெற்கென
உடனொருவர் செல்ல அனுமதி உண்டு அவளுக்கும் ஆதார் அவசியம்.
7) காலை உணவு பால் இலவசம்.
8.) அவர்களுக்கு 70 ரூபாய்க்கு 4 லட்டுகள் வழங்கப்படும்.
9) ஒருமுறை சென்றவர் 3 மாத காலத்திற்கு பின்னரே மீண்டும் அனுமதிக்கப்படுவர்.
10) இவை அனைத்தும் இலவச சேவையாகும். பயனுள்ள தகவலை பகிரலாமே. இந்த தகவல்கள்அனைத்தும் திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை !

🙏 ௐ நமோ நாராயணா....!

Friday, February 15, 2019

மனஅமைதியும், அர்த்தமுள்ள வாழ்க்கையையும்........

❗தகப்பனே கொலை செய்ய முயற்சித்த போதும் ப்ரஹ்லாதன் மனம் கலங்கவில்லை...

❗சுடுகாட்டு வெட்டியானுக்கு
அடிமையாக்கிய போதும்
ராஜா அரிச்சந்திரன் மனம் கலங்கவில்லை...

❗பெற்ற பிள்ளையே
கேவலப்படுத்திய போதிலும் கைகேயி மனம் கலங்கவில்லை...

❗உறவினர்களே சபை நடுவே அசிங்கப்படுத்திய போதும் விதுரர் மனம்கலங்கவில்லை..

❗அம்புப்படுக்கையில் வீழ்ந்த போதிலும் பீஷ்மர் மனம் கலங்கவில்லை...

❗இளம் விதவையான
சமயத்திலும் குந்திதேவி மனம் கலங்கவில்லை...

❗தரித்ரனாக வாழ்ந்த
சமயத்திலும் குசேலர்
மனம் கலங்கவில்லை...

❗ஊனமாகப் பிறந்து
ஊர்ந்த போதிலும் கூர்மதாஸர் மனம் கலங்கவில்லை...

❗பிறவிக் குருடனாக இருந்த போதிலும் சூர்தாஸர் மனம் கலங்கவில்லை...

❗மனைவி அவமானப்படுத்திய போதிலும் சந்த் துகாராம் மனம் கலங்கவில்லை...

❗கணவன்கஷ்டப்படுத்திய போதும் குணவதிபாய் மனம் கலங்கவில்லை...

❗இருகைகளையும்வெட்டிய நிலையிலும் சாருகாதாஸர் மனம் கலங்கவில்லை...

❗கைகால்களை வெட்டிப்
பாழுங்கிணற்றில்தள்ளியபோதும்
ஜயதேவர் மனம் கலங்க வில்லை

❗மஹா பாபியினிடத்தில்
வேலை செய்த போதும்
சஞ்சயன் மனம் கலங்க வில்லை...

❗பெற்ற பிள்ளையை
பறிகொடுத்த போதும்
பூந்தானம் மனம் கலங்கவில்லை...

❗கூடப்பிறந்த சகோதரனே
படாதபாடு படுத்தியபோதும்
தியாகராஜர் மனம் கலங்கவில்லை...

❗நரசிம்மர் சன்னிதியில்
விஷ தீர்த்தம் தந்த போதும்
மஹாராஜா ஸ்வாதித் திருநாள் மனம் கலங்கவில்லை...

❗சோழ ராஜனின் சபையில் கண்ணை இழந்த பின்பும்
கூரத்தாழ்வான் மனம் கலங்கவில்லை...

எப்படி முடிந்தது இவர்களால்..?
ரகசியம்...

Get upto Rs. 5000 off on Honor Smartphones : Valid till : Stock Lasts

தங்களோடு இறைவன் எப்பொழுதும் இருக்கின்றான் என்று உணர்ந்ததால்...🙏

கடவுள் எப்பொழுதும் கூடவே இருக்கிறான் என்று உணர வழி?

ஆழ்ந்த நம்பிக்கை...

அந்த நம்பிக்கை ஏற்பட வழி..?

முதல் வழி...
(சொல்லறிவு)

அறிஞர்கள், ஞானிகள் மற்றும்
சான்றோர்களின் கூற்றை மனபூர்வமாக ஏற்று கொள்ளுதல்

இரண்டாம் வழி...
(சுய அறிவு)

மன அமைதியுடன், நடுநிலை உணர்வுடன், ஆழ்ந்த சிந்தனையில் புத்தி பல வகைகளில் ஆய்வு செய்து, உண்மை விளங்கும் போது மனம் தெளிவடைந்து... அப்போது ஏற்படுவது...

நம்பிக்கை ஏற்பட்ட பின்...

மனம் செல்ல வேண்டிய பாதையில் சரியாக சென்று, உடல் மற்றும் மன ஆற்றலை பெருக்கி கொள்ளும் பயிற்சியாக...

தொடந்து செய்யப்படும் பிரார்த்தனை முறைகள்...

அந்த பிரார்த்தனைகள்...

மந்திரமாக இருக்கலாம்...

கீர்த்தனைகளாக இருக்கலாம்...

மேலும், அனைத்திற்கும் அடிப்படையாக விளங்கும் "அன்பும், அறநெறியும், உண்மையும், சத்தியமும், நியாய தர்மங்களை காக்கும் பண்புகளாகவும்..." இருக்கலாம்.

இவற்றை மாறாமல் கடை பிடித்தால்,வாழ்வில் தோன்றும் எந்த சங்கடங்களையும் எளிதில் கடக்கலாம்...

என்ன நடத்தாலும்,எதை இழந்தாலும், ஆத்மதிருப்தியுடன் செய்யும் செயல்களே ஆத்ம பலத்தை தரும்..."

அந்த ஆத்ம பலமே...
எதையும் தாங்கும் சக்தி...

ஆதலால் ...

திடமாக பகவானை வழிபடுவோம்...

உறுதியுடன் உண்மையாக இருப்போம்...

இதனால் பெற்றிடுவோம்...
மனஅமைதியும், அர்த்தமுள்ள வாழ்க்கையையும்........

Wednesday, February 13, 2019

ஒரு சின்ன கதை

👇👇👇ஒரு சின்ன கதை இரண்டு நிமிடம் ஒதுக்கி படியுங்கள் நண்பர்களே 👇👇👇

ரெண்டு இட்லி!!

இரக்க குண பெண்மணி ஒருத்தி
தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் சுவர் மேல் வைப்பாள்...

அவ்வழி திரியும் ஒரு கூனல் முதுகு கிழவன் அதை எடுத்துக் கொண்டு,
ஏதோ முனகிக் கொண்டே போவான்.
இது அன்றாட வழக்கமாயிற்று!.

ஒரு நாள் மதில் அருகிலேயே நின்று,
கிழவன் என்ன முனகுகிறான் என்று
செவிமடுத்து கேட்டாள்.

அவன் முனகியது, இதுதான்:
" நீ செஞ்ச பாவம் ஒங்கிட்டேயே இருக்கும்;
நீ செஞ்ச புண்ணியம் ஒன்னிடமே திரும்பும்."

தினந்தோறும் இதையே சொல்லிக் கொண்டு போனான்.
'தினமும் இட்லி வைக்கிறேன்; எடுத்துட்டு போறான்;
"நீ மவராசி நல்லா இருக்கணும் " ன்னு
கையெடுத்துக் கும்பிட்டு கை, கால்ல விழல்லைனாலும்,
"இட்லி நல்லா இருக்கு "ன்னு பாராட்டல்லனாலும்;
" ரொம்ப நன்றி தாயே" ன்னு சொல்லக் கூடவாத் தோணல ;
ஏதோ,... "செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்;
செஞ்ச புண்ணியம் ஓனக்கே திரும்பும்" ன்னு
தினம் தினம் உளறிட்டுப் போறானே'
என்று எண்ணி எண்ணி புலம்பினாள் அவள்.

'இவன் என்ன பித்தனா, இல்ல, சித்தனா, பரதேசி பய' என்று திட்டினாள்.
'நன்றி கெட்ட கூனனை' நினைத்து
மன உளைச்சலுக்கு ஆளானாள்!
நாளடைவில் அவளது கோபம் தலைக்கேறி,
கொலை வெறியாக மாறியது!
ஒருநாள் இட்லி மேல் விஷம் கலந்து செத்து தொலையட்டும் என
மதில் மேல் வைக்கப் போனாள்....

மனம் ஏனோ கலங்கியது;
கை நடுங்கியது. அவன் அப்படி இருந்தாலும், சே...நாம் ஏன் இப்படியாகணும்னு
அந்த விஷம் கலந்த இட்லியை சாக்கடையில் எறிந்து விட்டு
வேறு நல்ல இட்லியை மதில் மேல் வைத்து விட்டு மனம் அமைதியானாள்.

வழக்கம் போல் கூனக் கிழவன் வந்தான்;
இட்லியை எடுத்துக் கொண்டு,
வழக்கம்போல,
"நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும் ;
நீ செஞ்ச புண்ணியம் ஓன்னிடமே திரும்பும்! "
என்று சொல்லிக் கொண்டே சென்றான்!
அவனை அப்படியே அறையலாம் போலிருந்தது, அந்த பெண்மணிக்கு!.

அன்று மதியம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, கதவைத் திறந்தாள்;
வாசலில் வாலிபன் ஒருவன்
கசங்கிய உடையோடு தள்ளாடிய படி நின்றிருந்தான்.

வேலையோடுதான் திரும்புவேன் என்று சொல்லி விட்டு ஒரு மாதம் முன்பு வேலை தேடி வீட்டை விட்டு சென்ற அவளது ஒரே மகன்தான் அவன்!.

"அம்மா, வீட்டுக்கு திரும்பி வரும் போது
என் பர்ஸ் காணாம போச்சு; கையில காசு இல்ல;
தெரிஞ்சவங்க யாரும் கண்ணுல படல;
மணிக் கணக்கில நடந்து வந்துட்டே இருந்தேன்;
நல்ல வெய்யில்; அகோரப் பசி வேறு;
மயங்கி விழுந்துட்டேன்;
கண் முழிச்சு பாத்தப்போ...
யாரோ ஒரு கூனமுதுகு கிழவன்
என்னை தூக்கி உட்கார வச்சு
ரெண்டு இட்லி கொடுத்து சாப்பிடச் சொன்னான்.

இட்லி சாப்பிட்ட பிறகுதான் எனக்கு உசுரே வந்தது!
இதைக் கேட்டதும்,பேயறைந்தது போல் அதிர்ச்சி அடைந்தாள்!

'விஷம் கலந்த இட்லியை கூனனுக்கு கொடுத்திருந்தால்...
அது என் மகனுக்கே எமனாக ஆகியிருக்குமே, ஆண்டவா!'
என்று நினைத்து தாய் உள்ளம் பதைபதைத்தது; கண்கள் பனித்தன..

"நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்
நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் "
...கூனன் முனகலின் பொருள் இப்போது நன்கு புரிந்தது!
உன்மைதான் ...

எல்லாருக்கும் எல்லாம் புரிவதில்லை...

புரியும் வேளையில் வாழ யாரும் இருப்பதும் இல்லை....

செய்த தர்மம் என்றும் நம்மை ஏதாவது ஒரு ரூபத்தில் காக்கும்.

ஏதேனும் ஒரு தர்மம் செய்யும் சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே.

படித்ததில் பிடித்தது!

"திருவார்பு கிருஷ்ணா கோயில்:"

இது உலகிலேயே மிகவும் அசாதாரணமான கோயில் ஆகும்..

ஒவ்வொரு நாளும் திறந்திருக்கும் நேரம் 23.58 x 7..

கோயில்
மூடுவதற்கு நேரம் இல்லை..

Motorbike parts & accessories

Explore the wide collection of motorbike accessories like safety equipment, helmets, head and face covers, protectors, jackets, gloves, bike covers, lighting and more at Amazon India. Shop for motorbike accessories from top and popular brands like Vega, Probiker, Numlock, RRC, Mototrance and many others at attractive prices online at Amazon.in

https://bit.ly/2GtoAqX

இங்கே இருக்கும் கிருஷ்ணருக்கு எப்பொழுதும் பசித்துக் கொண்டே இருக்குமாம்..

அற்புதம்!

1500 ஆண்டுக்கும் மேல் பழமையான இந்த கோவில்..

கேரள மாநிலம், 

கோட்டயம் மாவட்டம்  திருவார்புவில் இக் கோயில் அமைந்துள்ளது.

இங்கு கிருஷ்ணர் எப்போதும் பசியாக இருக்கிறார்.

எனவே 23.58 மணி நேரமும்,

365 நாட்களும் கோவில் திறந்திருக்கும்.

கோயில் 2 நிமிடங்களுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளது.

11.58 மணி முதல் 12 மணி வரை..

இந்த கோவிலின் இன்னொரு தனிச்சிறப்பு என்னவென்றால்,

கோவில் நடை சாத்தி அடுத்த இரண்டாவது நிமிடம் மீண்டும் கோவில் நடை திறக்க தந்திரியின் கைகளில் ஒரு கோடாரியும் கொடுக்கப்படுகிறது.

கிருஷ்ணா பசியை சகித்துக் கொள்ள முடியாது என்று நம்புவதால்,

ஏதாவது ஒரு காரணத்தால் கதவு திறக்கப்படுவதற்கு தாமதம் ஏற்பட்டால் கோடாரி உதவியுடன் கதவைத் திறக்க அனுமதிக்கப்படுகிறது.

கம்சனைக் கொன்ற பிறகு கிருஷ்ணர் மிக உஷ்ணமாக இருந்தார்.

அந்த நிலையில் இருந்த  கிருஷ்ணரே இக்கோவில் மூலவர் சிலை  என்று மக்கள் நம்புகின்றனர்.

அபிஷேகம் முடிந்தபின் மூலவரின் தலையை முதலில் உலர்த்தியபின்,

நைவேத்திம் அவருக்குப் படைக்கப்படும்,

பின்னர் அவருடைய உடல் உலர்த்தப்படும்.

இந்த கோயிலின் இன்னொரு தனிச்சிறப்பு என்னவென்றால்,

கிரகணத்தின் போது கூட கோயில் மூடப்படுவதில்லை.

அப்படி மூடினால் இந்தக் கிருஷ்ணர் பசி தாங்க மாட்டார் என்று மக்கள் நம்புகிறார்கள்.

ஒருமுறை கோயில்..

கிரகணத்தின் போது மூடப்பட்டது.

கதவைத் திறந்தபோது ​​ஆண்டவரின் இடுப்புப் பட்டை  வீழ்ச்சியடைந்ததைக் கண்டார்கள்.

அந்த சமயத்தில் வந்த ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார்,

கிருஷ்ணர் மிகவும் பசியாக இருப்பதால் தான் அவ்வாறு நடந்ததுஎன்று சொன்னார்.

அப்போதிருந்து கிரகணத்தின் போதும் அக்கோவில் மூடப்படுவதில்லை.

கிருஷ்ணா தூங்கும் நேரம் தினமும் 11.58 மணி முதல் 12 மணி வரை 2 நிமிடங்கள் மட்டுமே.

பிரசாதம் பெறாமல் பக்தர்கள்  செல்ல அனுமதி இல்லை.

தினமும் 11.58 மணி (ஆலயத்தை மூடுவதற்கு முன்பு) பூசாரி சத்தமாக,

"இங்கு யாராவது பசியாக உள்ளீர்களா?"

என அழைப்பார்.

மற்றொரு முக்கிய விஷயம்,

நீங்கள் பிரசாதம் சுவைத்தால்,

நீங்கள் அதன்பிறகு பசியால் வாட மாட்டீர்கள்.

உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு உணவுப்பிரச்சனை இருக்காதாம்.

கோயிலின் முகவரி:

திருவார்பு கிருஷ்ணா கோயில்,

திருவார்பூ - 686020,

கோட்டையம் மாவட்டம்,

கேரள மாநிலம்..

கோவில் திறப்பு நேரம்:

நல்லிரவு 12.00 மணி முதல் நல்லிரவு 11.58 மணி வரை..

எல்லாம் கிருஷ்ணார்ப்பயாமி...

🙏ந🙏ன்🙏றி🙏

யாருடைய செயலுக்கும் கருத்து சொல்வதற்க்கு முன் ???

தனது மாணவர்களுக்கு ஆசிரியை ஒருவர் கூறிய ஒரு கதை:

"ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் தப்பிக்க மட்டுமே  படகு ஒன்று  இருக்கிறது.

மனைவியை பின்னே தள்ளி விட்டு கணவன் மட்டும் அந்தப் படகில் தப்பிச்செல்கிறார்.

 கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக....
இந்த இடத்தில் என்ன சொல்லியிரிப்பார்???"

 என்று மாணவர்களை நோக்கி ஆசிரியை கேட்டார்.

எல்லா மாணவர்களும் பல வகையான பதில் தரும் போது ஒரு மாணவன் மட்டும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.....

"ஏம்பா நீ சைலண்டா இருக்க......"

'நம்ம கொழந்தைய பத்திரமா பாத்துக்கங்கன்னு சொல்லிருப்பா டீச்சர்'

"எப்பிடிப்பா கரெக்டா சொல்ற, உனக்கு முன்னாடியே இந்த கதை தெரியுமா?"

'இல்ல டீச்சர், எங்கம்மாவும் சாவுறதுக்கு முன்னாடி அப்பாக்கிட்ட இதையேதான் சொன்னாங்க...'

பலத்த மௌனத்திற்கு பிறகு ஆசிரியை கதையை தொடர்ந்தார்.

தனி ஆளாக அவர்களது பெண்ணை அந்த மனிதன் வளர்த்து வந்தார். அவரின் மரணத்தின் பின்னர் பல வருடங்கள் கழித்து அந்தப் பெண் தனது தந்தையின் டைரியைப் பார்க்க நேர்ந்தது.

 தாய்க்கு உயிர் கொல்லி நோய் இருந்திருப்பது அப்போதுதான் அவளுக்கு தெரிய வந்தது.

 கப்பல் கவிழ்ந்த சம்பவத்தை அப்பா இவ்வாறு எழுதியிருந்தார்.

' உன்னோடு நானும் கடலின் அடியில் சங்கமித்திருக்க வேண்டும்... நம் இருவரின் மரணமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். நான் என்ன செய்ய, நமது பெண்ணை வளர்த்தெடுக்க நான் மட்டுமே தப்ப வேண்டியிருந்தது'.

கதையை இதோடு முடித்து விட்டு அந்த ஆசிரியை கூறினார்:

'வாழ்க்கைல நல்லது கெட்டது எல்லாமே நடக்கும். எல்லாதுக்கும் காரணம் இருக்கும் ஆனா சில நேரங்கள்ல நம்மால் புரிஞ்சிக்க இயலாம போகலாம்.

அதனால நாம ஆழமா யோசிக்காமலோ, சரியா
புரிஞ்சிக்காமலோ யார் மேலயும் முடிவுக்கு வந்துடக்கூடாது.'

Up to 30% off : Grocery essentials

Exclusive offers on top Grocery brands like Lipton, Tetley, Nescafe & more

https://bit.ly/2GDDav3


*'நாம சாப்பிட  ரெஸ்டாரெண்ட் போனா, ஒருத்தன் காசு கொடுக்க முன்வந்தா அவன் பணக்காரன் என்று அர்த்தமில்ல, பணத்த விட நம்ம நட்ப அதிகமா மதிக்கிறான்' னு  அர்த்தம்.

*'முதல்ல மன்னிப்பு கேக்கிறாங்கன்னா அவங்க தப்பு பண்ணிருக்காங்கன்னு அர்த்தமில்ல, ஈகோவ(Ego) விட  உறவை மதிக்கிறாங்க' னு அர்த்தம்.

'நம்ம கண்டுக்காம விட்டாலும்  நமக்கு போன், மெஸேஜ் பண்றாங்கன்னா அவங்க வேல வெட்டி இல்லாம இருக்காங்கன்னு அர்த்தமில்ல, நம்ம அவங்க மனசில இருக்கோம்னு அர்த்தம்'.

பின்னொரு காலத்தில நம்ம புள்ளங்க நம்மகிட்ட கேட்கும்,,,,,
'"யாருப்பா அந்த போட்டோல இருக்கிறவங்கல்லாம்???"'

ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோட நாம சொல்லலாம் ' அவங்க கூடத்தான் சில நல்ல தருணங்களை  நாம கழிச்சிருக்கோம் என்று...

      வாழ்க்கை குறுகியது...ஆனால்,
       மிகவும் அழகானது... எனவே
      நம்மை தேடி வரும் உறவுகளை
         மதிப்போம்...‌‌.           
மகிழ்ச்சியாக வாழ்வோம்...

Friday, February 1, 2019

Thanks for 1K Subscribers | LVSMV ROCKSTAR

மரம் ஒன்றே ஒரே மந்திரம்...

பத்து வருடம்

பத்து வருடங்கள் என்பது ஒரு சிறு கால அளவாக தோன்றுமாயின் அது மிக பெரிய தவறு.

பத்து வருட கால அளவுகளில் எத்தனை குடும்பங்கள் வேலையிழந்தது எத்தனை அழிவுகளை சந்தித்தோம் என்று யாரேனும் சிந்தித்ததுண்டா?

1980 களில் தொலைக்காட்சி பெட்டி வந்தது.... பக்கத்து வீடுகளின் நட்பு துண்டாக ஆரம்பித்தது... ரேடியோக்கள் மறைய ஆரம்பித்தது...

செயற்கை உரங்கள் ஊடுருவ ஆரம்பித்தது... இயற்கை விவசாயம் அழிய ஆரம்பித்தது...

குளிர்பானங்கள் ஊடுருவ ஆரம்பித்தது...
இளநீர், பதநீர் அழிய ஆரம்பித்தது...

வெள்ளை சக்கரை பரவலாக பிரபலம் ஆனது... சர்க்கரை நோய் படர ஆரம்பித்தது...

சிகரட்டுகள் அதிக அளவில் விற்பனை தொடங்கின... வெற்றிலை பாக்கு அழிய ஆரம்பித்தது...புற்றுநோய் முலைக்க ஆரம்பித்தது...

ரீல் கேசட்டுகள் வந்தன... பாடல் நிறைந்த தட்டு கிராமோஃபோன்கள் ஒலிக்காமல் போயின...

ரஸ்னா வந்தது... எலும்பிச்சை சாறு ஆவியானது...

பெரிய ஊரிலிருந்து இன்னொரு பெரிய ஊருக்கு போகும் வழியே ஒற்றை தார் சாலை.... புளியமரங்கள் இருபுறமும் இருந்தது.

*மாவட்டத்திற்க்கு ஐந்து ஆறு மருந்து கடைகள் இருந்தது...

1990 களில்
வண்ண தொலைக்காட்சி வந்தது வண்ணவண்ண விளம்பரங்கள் வரதொடங்கின... நோய்கள் அதிக அளவில் வேர்விட ஆரம்பித்தது...

ஐஸ்வர்யா ராய் எல்லாம் ஒரு அழகி,  அவளை உலக அழகி என்றார்கள்.... மஞ்சள் பூசிய பெண்கள் ஃபேர் அன்ட் லவ்லிக்கு மாறினார்கள்...

கலர்கலராய் பேஸ்ட்கள் வந்தது... கோபால் பல்பொடி, பையோரியா பல்பொடி, வேப்பங்குச்சி, ஆலங்குச்சி, கரித்தூள், உப்பு, செங்கல்தூள் போட்டு பல் விளக்கியவர்கள் பேஸ்ட் பிரஷ் சகிதம் பல்லை பளிச் ஆக்கினார்கள்...

இரு சக்கர வாகனங்கள் நடுதர வர்க்கத்தினரும் வாங்ககூடி அளவுக்கு விலையில் குறைந்தது சைக்கிலில் பயனித்தவர் பலர் இன்று மூட்டுவலியோடு சக்கர நாற்க்காலியில்.

ஒன்றிரெண்டு வீடுகளில் இருந்த தொலைபேசி, தொலைக்காட்சி பெட்டி அதிகமான வீடுகளை தொட்டது... தபால் நிலையங்கள் ஓய்வு நிலையங்களாக மாறதொடங்கின...

சீ.டி பாட்டு தட்டு வந்தது... ரீல் பாட்டு கேசட்டுகள் ரீல் உருவபட்டன...

சரக்கு பாட்டில்கள் பல வடிவங்களில் வந்தன பலர் பல கோணங்களிலில் தெருவில் நடந்தனர்...

மேகி வந்தது... பழைய சாதம், இட்லி,  தோசை, இடியாப்பம் போன்ற காலை உணவு செரிக்காமல் போனது...

ஐஸ்கட்டி பெப்ஸி வந்தது... கப்ஐஸ், பால்ஐஸ், சேமியாஐஸ் கரைந்து போனது...

ஏசி பிரபலம் ஆனது... மரங்களுக்கு பிராபளம் ஆனது...

வாசிங் மெஷின் வந்தது... இன்று பெண்கள் எலும்பு சத்து கால்சியம் ஹார்லிக்ஸ் குடிக்கிறார்கள்...

ஃபிரிட்ஜ் வந்தது... மண்பானைகள் உடைந்தது...

ஓசோன்ல ஓட்டைங்கற புது வார்த்தை காதுக்குள் பாய்ந்தது...

வீடியோ கேம்ஸ் வந்தது... பம்பரம், கோலிகுண்டு, கிட்டிபுல் போன்ற விளையாட்டுக்கள் மாயமானது...

ஊருக்குள்ளே ஒரு பெரிய பகுதியிலிருந்து இன்னொரு பெரிய பகுதிகளுக்கு தார்சாலை... ஊர்சாலை இருவழி சாலையாக மாற்றப்பட்டது... மரங்கள் வெட்டப்பட்டது...

*தாலுக்காவுக்கு பத்து பதினைந்து மருந்துக்கடைகள்... இருந்தது...

இன்னும் பல...

2000 களில்
ஆர்.ஓ சுத்திகரிப்பு வீட்டுக்குவீடு மாட்டப்பட்டது... சளி சிந்த ஆளுக்காளுக்கு கைக்குட்டை அவசியமானது... ஜலதோஷமா? ஆமாப்பா ஆமா, மூக்கடைப்பா? ஆமாப்பா ஆமா, விளம்பரம் பயன்பட்டது... மருந்து கம்பெனிக்காரன் கட்டிட கட்டுமான பொருட்களுக்கு புக் பண்ணான்.

மஞ்சள் பூசியபோது வராத தோல் நோய்கள், பரு, கரும்புள்ளி எல்லாம் மெல்லமாய் சருமம் மேல் தலைகாட்ட முகம் கருமமாக மாற கவலையடைந்த நம்ம ஊர் ஐஸ்வர்யாராய்களுக்கு விடைகிடைத்தது வண்ண தொலைக்காட்சி பெட்டியில் வந்த அடுத்தடுத்த விளம்பரங்கள்... இந்த முறை மருந்து கம்பெனிக்காரன் கட்டுமான பொருட்களையே தயாரிக்கவே ஆரம்பிச்சுட்டான் அவனோட அடுத்த கட்டிடங்களுக்கு...

டிஜிட்டல் கேமராக்கள் வந்தது... பல பிலிம் நிறுவனங்களும், ஸ்டுடியோக்களும் கடையை காலிசெய்தனர்.

குடிநீர் பாட்டில் வந்தது... ஏங்க கொஞ்சம் குடிக்க தண்ணிக்குடுங்க என்ற வார்த்தைகள் காணமல்போனது...

பட்டன் வச்ச செங்கல் செல்ஃபோன் போயி சிறுவடிவ செல்ஃபோன் வரை வந்தது லேண்ட்லைன் ஃபோன், பேஜர்களுக்கு பேஜார் ஆனது. விபத்துக்கள் அதிகம் ஆகின... ஹெல்மெட் வியாபாரம் பட்டைய கிளப்பின...

தெருவுக்கு தெரு தார்சாலை... ஊர்சாலைகள் நான்கு வழிபாதையாக மாற்றப்பட்டது... நன்கு மடங்கு மரங்கள் அழிக்கப்பட்டது...

வெப்பம் அதிகரித்தது ஆர்டிக் பனி உருக ஆரம்பித்தது...

*போஸ்ட்க்கு இருபது முப்பது மருந்து கடைகள் இருந்தது...


2010 லிருந்து
உங்களுக்கே தெரிந்திருக்கும்.... தெரியலைனா தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இருக்கு...

நாம் இப்பவும் ஆர்டிக் பனி உறைஞ்சு வந்தா என்ன அதான் ஓசோன்ல ஓட்டை இருக்கே அதுவழியா தண்ணி வெளியே போயிடும்யானு மொட்டை தலைக்கும் மொழங்கலுக்கும் சம்மந்தமே இல்லாம முடிச்சிபோட்டுக்கிட்டு ஜாலியா இருக்கோம்.

*வீட்டுக்கு வீடு மருந்து கடை தொடங்கும் அளவுக்கு மருந்துகள் உள்ளது.

ஆக இந்த பத்து வருடம் என்பது வளர்ச்சி தரும் கால அளவுனு தீர்மானிச்சா... அது முற்றிலும் தவறு... அடுத்த பத்து வருடத்தில் அதாவது 2020 லிருந்து 2030 க்குள் ஆக்ஸிஜன் சிலிண்டர் விற்பனைக்கு வந்துவிடும். ஏற்கனவே சினாவில் வியாபாரம் ஆக தொடங்கி விட்டது

இப்போதுதாவது விழித்துக்கொள் நண்பா... மரங்களை நடு ஆக்ஸிஜன் தானாக கிடைக்கும், மழை வரும்... நீர்நிலைகளை சரிசெய்து மழைநீரை சேமித்திடு... பாசனத்திற்க்கு திறந்து விடு. விவசாயம் பெருகும்... கால்நடைகளை பெருக்கு... இவைதான் எல்லா தொழிலுக்குமே மூலதனம்... சிந்தித்து செயல்படு.... மரமே மந்திரம்... மரம் ஒன்றே ஒரே மந்திரம்...

Wednesday, January 30, 2019

சுயமரியாதை!

சுயமரியாதை!
##############
கவிஞர் கண்ணதாசன் பத்து பக்கங்களில் சொல்ல வேண்டிய கருத்துக்களை நாலு வரி கவிதையில் சொல்லி விடுவார்.
பெரிய எழுத்தாளர்கள் நூறு பக்கங்களில் சொல்ல வேண்டியதை ஒரு சிறு கதையில் சொல்லி விடுவார்கள்.
அப்படிப் பட்ட என் மனதை தொட்ட கதை ஒன்று!
ஹோட்டல் ஒன்றிற்கு அப்பா தனது இரு மகன்களை அழைத்து வருகிறார். வந்தவர் அந்த இரு சிறுவர்களிடம் என்ன வேண்டும் என்று கேட்காமலே மூவருக்கும் இட்லி கொண்டு வர சொல்கிறார். சிறுவர்கள் இட்லி வேண்டாம் அப்பா! சப்பாத்திதான் வேண்டும் என்கின்றனர். அப்பா இட்லி போதும் .இதைச் சாப்பிடுங்கள் என்கிறார். அப்பாவிடம் சப்பாத்தி வாங்க பணமில்லை என்ற விவரம் தெரியாமல் இட்லி சாப்பிட தயங்குகின்றனர் சிறுவர்கள்!
அந்த சமயத்தில் படித்த பணக்கார இளைஞன் ஒருவன் சாப்பிட வருகிறான்.அவனைக் கண்டதும் சர்வர் வாங்க சார் என்று வரவேற்று என்ன வேண்டும் சார் என்று கேட்கிறான். இளைஞன் நெய் ரோஸ்டுக்கு ஆர்டர் கொடுக்கிறான். சர்வர்  மணக்க  மணக்க நெய் ரோஸ்ட் கொண்டுவந்து வைக்கிறான் .அப்போதுதான் தன் அருகில் இருக்கும் சிறுவர்களையும் அவர்களது அப்பா வையும் கவனிக்கிறான் இளைஞன்.
உடனே சர்வரை அழைத்து என்னப்பா நெய் ரோஸ்ட் ! வாயிலேயே வைக்க முடியலியே! இதை எடுத்துட்டு போ! போயி இந்த சிறுவர்களுக்கு வைத்தது போல எனக்கும் இட்லி கொண்டு வா என்கிறான்.
சார்.! நல்ல நெய் சார். உங்களுக்காக ஸ்பெசலாக போட்டது என்கிறான் சர்வர்.
ஏய் ! நான் சொன்னதைச் செய் என்கிறான் இளைஞன்.
சர்வரும் நெய் ரோஸ்டை எடுத்துக் கொண்டு போய், இட்லி கொண்டு வந்து வைக்கிறான்.
இளைஞன் மகழ்வோடு இட்லியை சாப்பிடுகிறான்.
இதைப் பார்த்த அந்த சிறுவர்களும் இட்லியை ஆவலுடன் சாப்பிடுகின்றனர்.
இவ்வளவுதான் கதை!
ஆனால் இதில் எவ்வளவு தத்துவங்கள் அடங்கி இருக்கின்றன!
அந்த இளைஞன் நினைத்தால் அந்த சிறுவர்களுக்கும் நெய் ரோஸ்ட் வாங்கி கொடுத்திருக்க முடியும்.
அப்படி செய்தால் அந்த அப்பாவின் சுய மரியதைக்கு பங்கம் ஏற்பட்டிருக்கும். அப்பாவின் இயலாமையை எடுத்து காட்டுவதாக அமையும்.அப்பாவின் மேல் சிறுவர்களுக்கு மதிப்பு குறையும்.
இவ்வளவும்
 அந்த இளைஞனின் செயலால் காப்பாற்ற பட்டு விட்டன !
இது பணக்கார இளைஞர்கள் பண்பாட்டை,பிறரின் சுய மரியதையை எப்படி காக்க வேண்டும் என்பதற்கு ஒரு பாடம்.
Valid till : Stock Lasts

Auto Kaaran Prank show | Semma Kalai #3 | LVSMV ROCKSTAR

Tuesday, January 29, 2019

அழகான வரிகள்....படித்ததில் பிடித்தது*

வியந்து போன வரிகள்
"" "" "" "" "" "" "" "" "" "
👌👌👌👌👌👌👌
நோய் வரும் வரை உண்பவன்,
உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்!
👌👌👌👌👌👌👌👌

பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல...
ஆனால், செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..!
👌👌👌👌👌👌👌👌

பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா?  செலவு செய்யுங்க.....!
உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க.!
👌👌👌👌👌👌👌👌

பிச்சை போடுவது கூட சுயநலமே...,
புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்...
👌👌👌👌👌👌👌👌

அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை...,
ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.
👌👌👌👌👌👌👌👌

வாழ்க்கையை கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு...,
அதற்கு அவமானம் தெரியாது
விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்..!!
 👌👌👌👌👌👌👌👌

வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்".
வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்"
👌👌👌👌👌👌👌👌

திருமணம் -
ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்...,
ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது.!!
👌👌👌👌👌👌👌👌

முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள்...,
பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள்.
அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.
👌👌👌👌👌👌👌👌

மீண்டும் ஒரு முறை முகம் பார்த்து பேசவேண்டியிருக்கும்
என்ற ஒரு காரணத்திற்காகவே,
நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன...!
👌👌👌👌👌👌👌👌



நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை.
👌👌👌👌👌👌👌👌

இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட...,
வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..............!
👌👌👌👌👌👌👌

பகலில் தூக்கம் வந்தால்,
உடம்பு பலவீனமா இருக்குனு அர்த்தம்..!!
இரவு தூக்கம் வரலைனா மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்...........!
👌👌👌👌👌👌👌👌

துரோகிகளிடம் 'கோபம்' இருக்காது
கோபப்படுபவர்களிடம் 'துரோகம்' நிச்சயமாக இருக்காது..  
👌👌👌👌👌👌👌

தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும் எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது..
👌👌👌👌👌👌👌

பிடித்திருந்தால் பகிரவும்...!!!

Kanchi SrI Athivaradar...48 days Sevai from 15/07.2019.


40 ஆண்டுகளுக்கு ஒரு முறை காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜ ஸ்வாமி கோயிலில் உள்ள அத்தி வரதர் தீர்த்தத்தில் இருந்து வெளி வரும் அத்தி வரதர் வரும் 15.07.2019 அன்று தீர்த்த குளத்தில் இருந்து வெளி வந்து நீராழி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

💥40💥 ஆண்டு ஒரு முறை மட்டுமே  🙏சேவிக்க முடியும்....
👉 ஏனெனில் அவர் இருப்பதோ, 👉நம் 👀கண்ணனுக்கு புலபடாத தண்ணிருக்கு அடியில்.

💁‍♀கோவிலின் நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே உள்ள இரண்டு 💥குளங்களில் தென்திசையில் உள்ள நீராழி மண்டபத்தின் 👉கீழே நீருக்கு அடியில் உள்ள ஒரு மண்டபத்தில் தன்னை மறைத்துக்கொண்டு இருக்கிறான் அத்தி வரத பெருமாள்.

💥இந்த குளத்தின் நீர் என்றும் வற்றுவ தில்லையாதலால் பெருமாள் யார் கண்ணுக்கும் புலப்பட மாட்டார்.
💁‍♀பெருமாளின் தாருமயமான திருமேனி 💥( மரத்தினால் செய்யப்பட்டது)💥

💁‍♀மிகப்பெரிய அத்தி மரத்தால் வடித்து , பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

💁‍♀பிரம்மனின் யாகத் தீயினின்று தோன்றியதால் சிறிது பின்னப்பட்டுவிட்டார். எனவே அசரீரி மூலம் தன்னை ஆனந்தத் தீர்த்தத்தில் விட்டுவிட்டு பழைய சீவரத்திலிருந்து சிலையை காஞ்சியில் பிரதிஷ்டை செய்யுமாறு கூறினார்.
Get upto 50% off on Home Appliances


🌹பெருமாள் பெரும் உஷ்ணத்தைத் தணிக்கவே தெப்பக் குளத்தில் வாசம் செய்கிறாராம்.

💁‍♀அப்படியே இவரை வெள்ளித் தகடு பதித்த பெட்டியில் சயனக் கோலத்தில் வைத்து ஆனந்த புஷ்கரணி மண்டபத்தின் நடுவே நீரில் வைத்து விட்டனர்.

💁‍♀பழைய சீவர பெருமாளை தேவராஜப் பெருமாள் என பிரதிஷ்டை செய்து விட்டனர்.

💥ஆனந்த தீர்த்தம் என்றும் வற்றாது. எனவே நீரை இறைத்து விட்டு ஆதி அத்தி வரதரை வெளியே கொண்டு வருவார்கள்.

🌹வெள்ளி தகடுகள் பதித்த பெட்டியில் சயன கோலமாக, அமிர்தசரஸ் என்னும் அந்த குளத்தில் மூழ்கியிருக்கும் பெருமாள், 💥40💥 வருடங்களுக்கு ஒரு முறை, மேலே வந்து, சயன மற்றும் நின்ற கோலமாக எழுந்தருளி இருப்பார்.

💥வசந்த மண்டபத்தில் 48 நாட்கள் பக்தர்களுக்கு 🙏சேவை சாதிப்பார்...

💁‍♀நின்ற கோலத்திலும், 💁‍♀சயனக் கோலத்திலும் தரிசனம் தந்தபின் மீண்டும் அனந்தத் தீர்த்தத்தில் சயனித்து விடுவார்.

💁‍♀பக்தர்கள் மிகவும் தொன்மையான இந்த அத்தி வரதரை, உற்சவ விழா வழிபாட்டோடு 👀கண் குளிர 🙏தரிசிக்கலாம்.

💁‍♀பிறகு மீண்டும் வெள்ளி தகடுகள் பதித்த பெட்டியில் வைத்து குளத்தில் மூழ்கடிக்கப் பட்டுவிடுவார்.

💥1939 ஆண்டு சேவை சாதித்தார்..
💥1979 ஆண்டு சேவை சாதித்தார்..
அடுத்து
💥15.07.2019 ஆண்டு சேவை சாதிக்க உள்ளார்...

💁‍♀அனைத்து பக்தாலுக்கும் தெரிய படுத்துங்கோ...

இன்னும் ஒருவருடம் என்று 🤔🤔🤔நினைக்க வேண்டாம்...

💁‍♀அத்திவரதரை சேவிக்க 🤔நினைக்க நினைக்க 👉நாட்கள் சென்றுவிடும்....

🌷👉அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில் தரிசனம்....

மூலவர் : வரதராஜர் (தேவராஜர்)
தாயார் :  பெருந்தேவி
தல விருட்சம் :  அரசமரம்
தீர்த்தம் : அனந்த சரஸ்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : அத்திகிரி, திருக்கச்சி
ஊர் : காஞ்சிபுரம்

🌷👉சிறப்புக்கள் சில...

* உற்சவருக்கு, "அழைத்து வாழ வைத்த பெருமாள்' என்ற வித்தியாசமான பெயர் இருக்கிறது.

* கீதையில் கிருஷ்ண பகவான், தனது வடிவமாகக் குறிப்பிட்ட அரச மரமே இத்தலத்தின் விருட்சம். மரத்தின் எதிரே கரியமாணிக்க வரதர் சன்னதி உள்ளது. புத்திரதோஷம் உள்ளவர்கள் அமாவாசையுடன், திங்கள்கிழமை சேர்ந்த நாளில் மரத்தையும், சன்னதியையும் சுற்றிவந்து வழிபடுகிறார்கள்.

* வைகாசி பிரம்மோற்ஸவம், ஆனி சுவாதி மற்றும் ஆடி கஜேந்திர மோட்ச நாட்களில் சுவாமி கருடசேவை காண்கிறார்.

* ராமானுஜருக்காக கண்களை இழந்த கூரத்தாழ்வார், பார்வை பெற்ற தலம் என்பதால், கண் நோய் நீங்க இங்கு வேண்டிக்கொள்கின்றனர்.

* காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களைக் குறிக்கும் விதமாக மூலஸ்தான படிகள், மதிலில் பதிக்கப்பட்ட கற்கள், தீர்த்தக்கரை படிகள் ஆகியவை 24 என்ற எண்ணிக்கையில் அமைந்துள்ளன.

Varada Varada Varada Varada.

Monday, January 28, 2019

வேண்டாம் விமர்சனம்!



தவத்தில் இருந்த ஒரு மகரிஷி, கண் திறக்காமல் தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது போட்டால், என்ன ஏதென பார்க்காமல் விழுங்கி விடுவார்.

இவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் கனிகள், அப்பம் முதலியவற்றை தருவர். இதனால் புண்ணியம் சேருமென கருதினர்.

ஒரு நாள் அந்நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரத்தில் மகரிஷி கையை நீட்ட, அவரை பரிகாசம் செய்யும் நோக்கத்தில், மன்னன் தான் வந்த குதிரை போட்ட சாண உருண்டையைப் போட, மகரிஷியும் வாயில் போட்டார்.

மன்னன் சிரித்தபடியே போய்விட்டான். மறுநாள் முனிவர் ஒருவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அவர் மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு குதிரைச்சாணம் கொடுத்தாய் இல்லையா?

அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும் அதை உண்ண வைப்பர் என சொல்லி விட்டு சென்றார்.

மன்னன் நடுங்கி விட்டான். தர்மம் செய்து, தன் பாவங்களை குறைக்க முடிவெடுத்தான். அரண்மனை நந்தவனத்தில் ஒரு குடில் அமைத்து தங்கினான்.

இளம்பெண்களை வரவழைத்து, திருமணத்திற்குரிய நகை, பணம் கொடுத்து, பாவம் செய்வதின் கெடுதல் பற்றி எடுத்துக்கூறி அனுப்பி விடுவான். இதை அவ்வூரில் சிலர் வேறுமாதிரியாக கதை கட்டினர்.

மன்னன், இளம்பெண்களை தவறான நோக்கில் வரச் சொல்கிறான். தவறுக்கு கூலியாக நகை, பணம் தருகிறான்என்றனர். ஒருநாள், பார்வையற்ற கணவரை அழைத்து வந்த ஒரு பெண், அரசனின் குடில் முன்பு நின்று பிச்சை கேட்டாள்.

அந்த கணவன் நீ யார் வீட்டு முன்பு இப்போது நிற்கிறாய்? எனக் கேட்டார். அரசன் வீட்டு முன்பு என்றாள் அந்தப் பெண்.  ஓ! தானம் கொடுப்பதாக சொல்லிக் கொண்டு பெண்களின் கற்பைச் சூறையாடுகிறானே அவன் வீட்டு முன்பா? என்றார் அந்த பார்வையற்றவர்.

அந்தப்பெண் அவரது வாயை பொத்தினாள். அன்பரே! என் கற்பின் சக்தியால் நான் முக்காலத்தையும் உணர்ந்தவள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மன்னன், ஒரு மகரிஷிக்கு குதிரை சாணத்தை கொடுத்தான்.

அது  நரகத்தில் மலையளவாக குவிந்து, இவன் உண்ணுவதற்காக தயாரானது. அவ்விஷயம் இவனுக்குத் தெரிய வரவே, இவன் கன்னியருக்கு தர்மம் செய்து, நற்போதனைகளை செய்தான்.

ஆனால் இவனை பற்றி தவறாகப் பேசி, அவனுக்காக குவிக்கப்பட்டிருந்த சாண மலையில், ஒவ்வொரு கவளமாக ஒவ்வொருவரும் பங்கிட்டு கொண்டனர். கடைசி கவளம் மட்டும் பாக்கியிருந்தது. 

இவனைப் பற்றி தவறுதலாக பேசி, அதை நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள். அடுத்த பிறவியிலும் பார்வையற்றே பிறப்பீர்கள் என்றாள். தவறு செய்தவர்கள் திருந்தும் முயற்சியை விமர்சிக்கக் கூடாது.

அப்படி செய்தால் அவன் செய்த பாவங்களை பங்கு போட்டு கொள்ளும் நிலைமை ஏற்படும்.

Go Win The World : Get A Website For Your Business (FREE Domain + Hosting + Email )

Sunday, January 27, 2019

A leaf as a wick🕯️🕯️

A leaf as a wick🕯️🕯️ Locally known as ‘pei viratti/pei marutti’ (literally, ‘ghost chaser’) , Malabar Catmint (Anisomeles Malabarica) is a medicinal plant that is commonly found in India. This herb's leaf is lit up like a cotton wick to chase mosquitoes away. These leaves were brought to the Open House, our Public Meeting Session, from the farm of Padmashri. T. Venkatapathi Reddiar, a horticulturist and florist from Puducherry.



Original Post by

Kiran Bedi
• 2nd Lt. Governor of Puducherry at Government of Puducherry

Get upto 80% off on Women's Clothing
Valid till : Stock Lasts

Please Comment, Follow by blog

Rare Footage of 1947 India

Please Comment, Follow by blog

திருநீர்மலை

திருநீர்மலை… அரசுத் துறை காப்பாற்றாது! நாம்தான் போராட வேண்டும்!

திருநீர்மலை திவ்ய தேசம் பெருமாள் கோவில் மலை அடிவாரத்தில் பெருமாளின் சந்நிதி ஒன்றும், மலை மேல் மூன்று சந்நிதிகளும் இருக்கின்றன.

108 திவ்ய தேசங்களில் 61வது இது. இங்கு நான்கு நிலைகளிலும் பெருமாளைத் நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் எனும் நிலையில் தரிசிக்கலாம். 100 அடி உயர மலையும் மலையடிவார சுற்றுப் பாதை முழுவதும் ஒரே புல எண் கொண்டு
பெருமாள் கோவிலுக்கு மட்டுமே சொந்தமான நிலம்.
இக்கோவில் பல உப கோவிலையும் நன்செய், புன்செய் நிலங்கள் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கொண்டது. வருட வருமானமே கோடிகளை தாண்டும். 3 வருடம் முன் வரை பரம்பரை அறங்காவலர் கண்காணிப்பில் திவ்யமாக நிர்வகிக்கபட்டு வந்தது. தற்போது அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் நேரடிக் கண்காணிப்பில் நிர்வாக அதிகாரி பி.சக்தி கவனித்து (கபளீகரம்) செய்து வருவதாக கோயில் பணியாளர்களே கூறுகின்றனர்.

நிர்வாக அதிகாரி பி.சக்தி வந்த சில நாட்களிலே மலையிலே கோயில் பின் பக்கம் “இயேசு சபை அல்லேலூயா” ஆரம்பிக்க மறைமுகமாக பணம் பெற்றுக்கொண்டதாகவும், அவரின் ஆசிர்வாதத்தில் கிருத்துவ சபை நடந்து வருவதாகவும் கூறுகிறார்கள்.

ஞாயிற்று கிழமைகளில் அவர்கள் நடத்தும் ஜெபக்கூட்டம் கோவில் மேலேயே பட்டாச்சார்யர்கள் அர்ச்சகர்கள் பக்தர்கள் அரண்டு ஓடும் அளவில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி உபயோகித்து தொல்லை கொடுக்கின்றனர்.

யாருடைய இடத்தில் யாரு ஆக்கிரமிப்பு செய்து அராஜகம் செய்வது. பெரும்பான்மையாக இருக்கும் போதே இந்த கதி. ஒவ்வொரு கோவிலாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மலைக்கோவில்களை குறி வைக்கிறது அந்த கும்பல்.

மலையே கோவில் அதுதான் திருநீர்மலை. அதற்கு சாட்சியாக மலையடிவாரம் சுற்றி நான்கு திசையிலும் பலி பீடக்கல் நடப்பட்டு சிறப்பு தினங்களில் பூசைகள் செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் எல்லைக்குள்ளே மலையடிவாரத்தின் உட்பகுதியிலேயே இறைச்சி கடை, கோழி கடை நடந்து வருகிறது.

அதனை தடுக்க வேண்டிய நிர்வாக அதிகாரி பி. சக்தி மௌனமாகவே இருக்கிறார் .அதன் காரணம் விசாரித்தால் அந்த கடைகளில் இருந்துதான் அவர் வீட்டுக்கே வார வாரம் கறி அனுப்பபடுகிறதாம் .

இந்து கோவிலில் வேலை செய்பவர்கள் ஊழியர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும் என்பது கட்டாய விதி அதிலும் நிர்வாக அதிகாரி ஊரில் உள்ள இந்துக்களை வேலைக்கு வைக்காமல் அதே ஊரில் உள்ள மதம் மாறியவர்களை வேலைக்கு நியமித்து உள்ளார், வேலை செய்பவர்கள் பெயரளவில் மட்டுமே இந்து. ஆனால் அவர்கள் திடீர் சபை கிறித்துவ கூட்டத்தினர்.

கோவில் அன்னதான உண்டியல் மாத வருமானம் கடந்த காலங்களில் சராசரி 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம். தற்போது 20 ஆயிரம் அதிக பட்சம் 25 ஆயிரம் மட்டுமே கணக்கு காட்டப்படுகிறது.

உணர்வுள்ள இந்து இயக்கங்கள் இதனை சட்டப்படி எதிர்கொண்டு திருநீர்மலையை சதிகாரர்களிடமிருந்து மீட்க நடவடிக்கை எடுப்பார்களா?

இந்திய பொருளாதாரமா??? உங்க உடல் நலமா???

தினமும் சைக்கிள் ஓட்டுபவனால் இந்தியா மட்டுமல்ல உலக பொருளாதாரமே சீரழியும்...

ஆச்சரியமா இருக்கா?  தொடர்ந்து படிங்க.....

ஏன்னா அவன் கார் வாங்க மாட்டான்...

அதற்காக கடன் வாங்கவும் மாட்டான்...

வட்டியும் கட்ட மாட்டான்...
பேங்க் பைனான்ஸ் கம்பெனிக்கு சல்லி பைசாவுக்குகூட  பிரயோஜனம் இல்லாதவன்...

கார் இன்சூரன்ஸ் பண்றதுக்கு வர மாட்டான்...

இந்த பெட்ரோல் டீசல்..... ம்ஹூம்... வாய்ப்பே இல்ல...

இவனால அமெரிக்கா, சவுதி அரேபியாவுக்கும் கூட எந்த பயனும் இல்ல...

சர்வீஸ் ஸ்பேர் பார்ட்ஸ் எதற்கும் இவன் செலவு செய்யறது இல்ல...

பார்க்கிங் கட்டணம்னு பெருசா எங்கேயும் செலுத்த மாட்டான்...

இதெல்லாம் போய்த் தொலையட்டும்னு உட்டா...

இவனுக்கு சுகர் வராது...
இதய நோய் வராது...
குண்டாகவும் மாட்டான்...
ஆஸ்பத்திரி, டாக்டர் , மருந்து கடை இதெல்லாம் இவனுக்குத் தேவையே இல்லை...

உலக
பொருளாதாரம் வளர இவன் எதுவும் செய்ய மாட்டான்...

அதே சமயம் ஒரே ஒரு பீட்ஸா கடை ஊர்ல உள்ள எல்லா டாக்டரையும் வாழ வைக்கும்...

10 இதய டாக்டர்...
10 பல் டாக்டர்...
10 டயட்டீசியன்...

இன்னும் ஒரு 50 மெடிக்கல் ஷாப்க்கு தேவையான பொருளாதாரம் அதனால கிடைக்கும்...

உடனே முடிவெடுங்க
சைக்கிளா?
காரா?

இந்திய பொருளாதாரமா???
உங்க உடல் நலமா???

Thursday, January 24, 2019

Carnatic Theory of Music (Summary): About Raga

NELLAI M VINAYAGA MOORTHY MCA., MA MUSIC: Carnatic Theory of Music (Summary): About Raga - T...:

YOUTUBE LINK: https://youtu.be/GLeRb95MdmA

எந்த சப்தமானது மனதிற்கும் செவிக்கும் இன்பத்தை தருகிறதோ அதுவே இராகமாகும்.
ஒரு சப்தத்தை கேட்டமாத்திரத்திலேயே மனம் லயிக்குமானால் அதுவே இராகமாகும் .
சப்தம் இரண்டு வகைப்படும் ஒன்று நாதம் மற்றொன்று  இரைச்சல் . ஒழுங்கான,
இனிமையான சப்தத்திலிருந்து உருவாகுவது நாதம். ஒழுங்கில்லாததும்
இனிமையில்லாததும்மான சப்தத்தை இரைச்சல் என்று கூறலாம். 
இசை என்ற சொல்லுக்கு இசையவைப்பது என்பது பொருள். எல்லா உயிரினங்களையும் இசையவைக்கும் சாதனமாக இசை கருதப்படுகிறது.
நாதம் என்பது இனிமையான ஓசை. நாதம் சம்பந்தப்பட்டே இசையும், நாதத்திலிருந்து
ஸ்ருதியும்,  ஸ்ருதியிலிருந்து ஸ்வரமும், ஸ்வரத்திலிருந்து இராகமும்
உருவாகிறது. ஸ்வரங்களால் ஏற்படுத்தப்படும் ஓசையே ஸ்ருதி எனப்படும். ஸ்ருதி
என்பது இசையின் அல்லது ஸ்வரத்தின் நிலைப்பாடு. இரண்டு ஸ்வரங்களுக்கு
இடையேயான இடைவெளியே ஸ்ருதி எனப்படும்.
கர்நாடக சங்கீதத்தில் அடிப்படையாக 72 இராகங்கள் இருக்கின்றன. அவற்றை தாய்
இராகம் என்றும் சம்பூர்ண  இராகம் என்றும் அழைக்கப்படுகிறது. சம்பூர்ணம்
என்றால் முழுமையடைந்தது என்று பொருள். ஒரு இராகத்தில் ஏழு ஸ்வரங்களும்
வருமானால் அது தாய் இராகம் அல்லது சம்பூர்ண இராகம் எனப்படும். ஆரோ
கணக்கிலும் அவரோ கணத்திலும் ஏழு ஸ்வரங்கள் வருமானால் அது தாய்  இராகம்
எனப்படும். 
ஆரோகணம், அவரோகணம் என்றால் என்ன ? ஸ்வரங்கள் படிப்படியாக மேலேறி போகுமானால்
அது ஆரோகணம் என்றும்,  படிப்படியாக கீழே இறங்கி வருமானால் அது அவரோகணம்
என்றும் அழைக்கப்படும்.
அடிப்படையான 72 இராகத்திலிருந்து பிறக்கக்கூடிய பல ஆயிரக்கணக்கான
இராகத்திற்கு ஜன்ய இராகம் என்று பெயர். ஆரோகணத்திலோ  அல்லது அவரோகணத்திலோ
ஒரு ஸ்வரம் விடுபட்டிருந்தால்கூட அது ஜன்ய இராகமாகும். 🙏🎻

Indian Railways Golden Chariot

Bangalore to Goa Luxury Train by Indian Railways Golden Chariot 👇🏽👇🏽👇🏽Enjoy

Please Comment, Follow by blog

அன்பு

 உறவுகளை வளர்த்துக் கொள்வதற்கு

அன்பின் பரிமாற்றங்கள் அதிகரித்தால்

எந்நாளும் ஆனந்தமே

அன்பு ஒரு குற்றமும் செய்யாது

அன்பில்லாமை தான் குற்றங்கள் செய்யும்

நிகழ்காலத்தில் எப்போதும் ஒன்றுபட்டு

மகிழ்ச்சியுடன் வாழப் பழகிக் கொண்டால்

இயற்கையோடு ஒத்து வாழ்வதற்கு வழி பிறக்கும்

அப்படியும் மீறி உறவுகளுக்கு இடையில் பிணக்குகள் தலைபட்டால்

நன்றாக ஆராய்ந்து பார்த்தால் தெரிந்து கொள்ள முடியும்

அன்பு என்ற பெயரில்

அதிகாரத்தையோ அல்லது ஆணவத்தினையையோ,

முன்னிலைப் படுத்தி இருப்போம்

அன்பு ஒருகாலத்திலும் தவறு செய்ய விடாது

ஏனெனில்

தவறு என்பதே அன்பின் ஆராதனையில்  இல்லை

🌾🍃ஜென் கதை📋 சிகரம் தொடு.

 ஒரு பெரிய பணக்காரர்.👳 மன அழுத்தம் தாங்காமல் தவித்தார். அப்போது அந்த ஊருக்கு ஒரு ஜென் துறவி வந்திருந்தார். ‘அவரைச் சந்திச்சா உன்னோட மனசுக்கு நிம்மதி கிடைக்கும்’ என்று சில நண்பர்கள் சிபாரிசு செய்தார்கள்.

☘பணக்காரருக்குப் பெரிய நம்பிக்கை எதுவும் இல்லை. ஆனாலும் நண்பர்கள் சொல்கிறார்களே என்பதற்காக அந்தத் துறவியைச் சந்திக்கச் சென்றார். அவரிடம் தன்னுடைய பிரச்னைகளை விளக்கிச் சொன்னார்.

🍁எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட துறவி அவருக்கு, " எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் நிகழ் காலத்தை மட்டும் ஆனந்தமாக அனுபவி " என்று அறிவுரை சொன்னார்.
அவற்றைக் கேட்ட பணக்காரருக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

🍁‘ஐயா, நீங்க என்னைத் தப்பா நினைச்சுக்கக்கூடாது. நான் சந்திக்கிற பிரச்னைகள் ரொம்பப் பெரிசு, அதையெல்லாம் இந்தமாதிரி சின்ன யோசனைகளால தீர்த்துடமுடியுமா? என்னால நம்பமுடியலை!’

🍁ஜென் துறவி கோபப்படவில்லை. ‘இங்கிருந்து உங்க வீடு எவ்வளவு தூரம்?’ என்றார்.

🍁‘ஏழெட்டுக் கிலோ மீட்டர் இருக்கும். ஏன் கேட்கறீங்க?’

‘பொழுது இருட்டிடுச்சே. நீங்க எப்படித் திரும்பிப் போவீங்க?’

🍁’அது ஒண்ணும் பெரிய பிரச்னையில்லை. நான் கார்லதான் வந்திருக்கேன்!’

🍁‘உங்க கார்ல இருக்கிற விளக்கு அந்த ஏழெட்டுக் கிலோமீட்டருக்கும் வெளிச்சம் காட்டுமா?’

🍁‘நிச்சயமா’ என்றார் அந்தப் பணக்கார். ‘அதில் என்ன சந்தேகம்?’

🍁‘எனக்குத் தெரிஞ்சு எந்தக் கார் விளக்கும் சில அடி தூரத்துக்குதான் வெளிச்சம் காட்டும். அதை வெச்சுகிட்டு ஏழெட்டுக் கிலோமீட்டர் எப்படிப் பயணம் செய்வீங்க?’

🍁‘என்ன சாமி காமெடி பண்றீங்க? நாம கார் ஓட்டற தொலைவுக்குமட்டும் வெளிச்சமும் வழியும் தெரிஞ்சாப் போதாதா? அதை வெச்சுகிட்டுக் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி ஏழெட்டு கிலோமிட்டர் என்ன? ஏழாயிரம் கிலோமீட்டர்கூடப் போகலாமே!’

🍁’அதேமாதிரிதான் நான் சொன்ன யோசனையும்!’ என்றார் ஜென் துறவி. ‘சின்னதா, எளிமையா இருக்கேன்னு பார்க்காதீங்க, அதைப் பயன்படுத்திக் கொஞ்சம் கொஞ்சமா முன்னாடி போனீங்கன்னா வழி தெரியும், எவ்வளவு தூரமும் பயணம் செய்யலாம்!’

💥முயற்சி  செய்யுங்கள்💥

வெற்றி நிச்சயம்

🌼சந்திர பலம் உள்ள நாட்கள்🌼 தேடினாலும் எளிதில் கிட்டா பதிவு

🌼எடுத்த காரியம் வெற்றியுடன் அமைத்துதரும் நட்சத்திரங்களுக்கு உகந்த, நட்சத்திர நாட்கள்

🌼நம் ராசி, நட்சத்திரத்துக்கு உகந்த நேரங்களை பெரும்பாலோர் பார்ப்பதில்லை. இதனால் மேற்கொள்கின்ற முயற்சிகள் தோல்வி அடையும். அந்த காலத்தில் பெரியவர்கள் நாள் செய்யாததை நல்லோர் செய்யார் என்பார்கள். நற்செயல்களை நல்ல நாள் நட்சத்திரத்தில் ஆரம்பித்தால் ஜெயம் உண்டாகும் என்பதற்காக இது சொல்லப்பட்டது. அதன்படி நமக்கு நன்மை செய்கின்ற நட்சத்திரங்கள் வரும் நாளில் முக்கியமான விஷயங்களை ஆரம்பிக்கலாம்.

🌼நல்ல விஷயங்கள் பேசலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். வங்கி கணக்கு தொடங்கலாம். கம்ப்யூட்டர், செல்போன் போன்ற சாதனங்கள் வாங்கலாம்.

🌼பரிகார பூஜைகள் செய்யலாம். வேலைக்கான முயற்சிகளை தொடங்கலாம். இப்படி செய்வதால் அந்த நட்சத்திர தாரபலம், சந்திர பலம் காரணமாக நம் முயற்சிகளுடன், அதிர்ஷ்டமும் சேர்வதால் காரிய வெற்றி, அனுகூலம் உண்டாகிறது.

🌼நாடி செல்லும் காரியங்கள் கை கூடிவர உங்கள் நட்சத்திரங்களுக்கு நன்மை தரும் நட்சத்திரங்கள்:

🌼அஸ்வினி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், பூரம், அஸ்தம், சுவாதி, பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼பரணி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், உத்திரம், சித்திரை, விசாகம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼கிருத்திகை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼ரோகிணி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், பூரம், சித்திரை, விசாகம், கேட்டை, அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

Wednesday, January 23, 2019

ஸ்ரார்த்தம் - விதிமுறைகள் - (ஸ்ரீ காஞ்சி பரமாச்சாரியார்).

ஸ்ரார்த்தம் - விதிமுறைகள் - (ஸ்ரீ காஞ்சி பரமாச்சாரியார்).

சாக்ஷாத் மஹேஸ்வர ஸ்வரூபமாகிய ஸ்ரீ மஹா பெரியவா ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அறிவுரை

பரலோகம், பித்ருலோகம், பித்ரு கர்மா .....

நாம் ஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். பரலோகம் உண்டு. பித்ரு லோகம் உண்டு. அங்கு பித்ருக்கள் வசிக்கின்றனர். நம் முன்னோர்கள் உடல் அழிந்ததும் பிரேத நிலையில் சில காலம் இருந்து தங்கள் செய்த நற்கர்மங்களின் பயனாகவும், பின் சந்ததிகள் செய்யும் பித்ரு காரியங்களின் பயனாகவும், பிரேத நிலை நீங்கியவராய் பித்ரு லோகத்தில் இடம் பெற்றவராக விளங்குகின்றனர்.

பித்ருக்களை உத்தேசித்து செய்யும் கர்மாவே ஸ்ரார்த்தம். நாம் செய்யும் முக்கியமான கர்மாக்களில் ஸ்ரார்த்தமும் ஒன்று. நமது முன்னோர்கள் தெய்வங்களுக்கு செய்யும் பூஜைகளை விட ஸ்ரார்தத்தை மிக பயபக்தியுடனும் ஆசாரத்துடனும் செய்து வந்திருக்கிறார்கள்.

மஞ்சள் துணியில் ஒரு ரூபாயை முடிந்து வைத்து விட்டு பிறகு நிதானமாக முடிந்த போது தெய்வ சங்கல்பத்தை நிறைவேற்றலாம். ஆனால் ஸ்ரார்த்தம் அவ்வாறல்ல. குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்டபடி ஸ்ரார்த்தம் செய்தே ஆக வேண்டும்.

ஸ்ரார்த்தம் செய்வதினால் யாருக்கெல்லாம் திருப்தி?

1. எப்போதும் நம்மை வாழ்த்துகின்ற பித்ருக்கள்.
2. அவர்களுக்கு துணை வருகின்ற விஸ்வே-தேவர்கள் என்ற தேவப்பிரிவினர்.
3. ஹோமத்தில் பாகம் பெருகின்ற அக்னி பகவான்.
4. எந்த இடத்தில் ப்ராம்ஹண போஜனம் நடந்தாலும் அதன் மூலம் திருப்தி அடைகின்ற தேவர்கள்.
5. பிண்டப்ரதானத்தினாலும், விகிரான்னத்தினாலும் வேறு வழியில் திருப்தி பெற வாய்ப்பில்லாத நரகத்தில் இருப்பவர்களுக்கும்.
6. பித்ருலோகம் அடைய இயலாத நிலையில் உள்ளவரும்.

இவ்வாறாக நாம் அறிந்திராத பித்ருக்கள் என பலர் நாம் செய்யும் ஸ்ரார்த்ததில் பல கட்டங்களில் பல மந்திரங்களின் மூலம் திருப்தி அடைகின்றனர்.

சிவாச்சார்யார், குருக்கள் என்றால் சிலருக்கு கேவலமாகவும், இலக்காரமாகவும் இருக்கிறது அது ஏன்?


சிவாச்சார்யார், குருக்கள் என்றால் சிலருக்கு கேவலமாகவும், இலக்காரமாகவும் இருக்கிறது அது ஏன்?
இன்று சில மாடர்ன் பிராமண யுவதி கள் வைக்கும் முதல் கண்டிஷன் "கோவில்பூஜை" செய்யும் பையன் வேண்டாம் என்பதே (அவள் தந்தையே ஒரு கோவில் குருக்களாக இருந்து தான் அந்த குடும்பத்தை கரை சேர்த்திருப்பார்) பாவம்!அவர்களுக்கு ஒபாபாமாவே...
கோவிலுக்கு வந்தாலும் ஒரு குருக்களிடம், தான் பய பக்தியுடன் விபூதி வாங்க வேண்டும்! என்று தெரிய வாய்ப்பு இல்லை.குருக்களாக ஆலயத்தில் இருத்தல்... என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை. இறைவனின் நேரடிப் பணியாளன் எனபவரே குருக்கள் ஆவார். உப பணி என்பது ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் குறைகளை இறைவனிடம் அவர்களுக்காக,வேண்டி முறையிடுவது என்பதே. எந்த குருக்களாவது தான் செய்யும் பணிக்கு அதற்கான முழு ஊதியம் பெறுகிறார்களா? இல்லை என்பதே வேதனையான "உண்மை'. ஒரு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆவதற்கு சர்வீஸ் கமிஷன் தேர்வு பாஸ் செய்தால் போதும்..ஆனால் இதே "சிவாச்சார்யார்' என்கிற தகுதிப் பெற அதன் படிப்பின் விபரங்கள் இதோ
1)காமிகரகமம்,
2)யோகஜகம்,
3)சிந்தியம்,
4)காரணாகமம்,
5)அதம்,
6)தீப்த ஆகமம்,
7)குஷ்மம்,
8)சஹஸ்ர ஆகமம்,
9)அம்சுமான் ஆகமம்,
10)சுப்ரபேதம்,
11)விஜயாகமம்,
12)நிக்வாசம்,
12)சுவயம்புவம்,
14)அனலம்,
15)வீராகம்ம்,
16)ரௌரவாகமம்,
17)மகுடாகமம்,
18)விமலாகமம்,
19)சந்திர ஞானம்,
20) முகபிம்பாகமம்,
21)புரோத்கிதாகமம்,
22)லலிதாகமம்,
23)சித்தியாகமம்,
24)சந்தானாகமம்,
25)சர்வோக்த்தமம்,
26)பாரமேஸ்வரம்,
27)கிரணாகமம்,
28)வாதுளாகமம் என 28 வகை. இவற்றுக்கு 207 உப ஆகமம் வேறு!
இதை உருவாக்கிய சிவாச்சார்யார்கள் விபரம்:
1)தூர்வாச சிவாச்சார்யார்,
2)பிங்கள சிவாச்சார்யார்,
3) உக்ர ஜோதி சிவாச்சார்யார்,
4)சுபோதக சிவாச்சார்யார்,
5)கண்ட சிவாச்சார்யார்,
6)விஷ்ண கண்ட சிவாச்சார்யார்,
7)விதயர கண்ட சிவாச்சார்யார்,
8)ராம கண்ட சிவாச்சார்யார்,
9)ஞான சிவ சிவாச்சார்யார்,
10)ஞான சங்கர சிவாச்சார்யார்,
11)ஸோசம்பு சிவாச்சார்யார்,
12)பிரம்ம சம்பு சிவாச்சார்யார்,
13)த்ரி லோன சிவாச்சார்யார்,
14)ராமநாத சிவாச்சார்யார்,
15)ஈசான சிவாச்சார்யார்,
16)வருண சிவாச்சார்யார்,
17)பிரஸாத சிவாச்சார்யார்,
18)அகோர சிவாச்சார்யார் என்பதாகும்.
"தெய்வம் மனுஷ ரூபேனா"

Monday, January 21, 2019

ஆதி சங்கரரின் பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா என்ற படைப்பு புகழ் பெற்றது. அதில் இடம் பெற்றுள்ள கேள்வி, பதில்களிருந்து சில... :

ஆதி சங்கரரின் பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா என்ற படைப்பு புகழ் பெற்றது. அதில் இடம் பெற்றுள்ள கேள்வி, பதில்களிருந்து சில... :

1. எது இதமானது ?
தர்மம்.

2. நஞ்சு எது ?
பெரியவர்களின் அறிவுரையை அவதிப்பது.

3. மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது ?
பற்றுதல்.

4. கள்வர்கள் யார் ?
புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள்.

5. எதிரி யார் ?
சோம்பல்.

6. எல்லோரும் பயப்படுவது எதற்கு ?
இறப்புக்கு.

7. குருடனை விட குருடன் யார் ?
ஆசைகள் அதிகம் உள்ளவன்.

8. சூரன் யார் ?
கெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன்.

9.மதிப்புக்கு மூலம் எது ?
எதையும் யாரிடமும் கேட்காமல் இருப்பது.

10. எது துக்கம் ?
மன நிறைவு இல்லாமல் இருப்பது.

11. உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம் ?
குற்றங்கள் புரியாமல் வாழ்வதை.

12. தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை ?
இளமை, செல்வம், ஆயுள்.... ஆகியவை.

13. சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார் ?
நல்லவர்கள்.

14. எது சுகமானது ?
அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது.

15. எது இன்பம் தரும் ?
நல்ல மனதுடையோர்களின் சிநேகிதம்.

16. எது மரணத்துக்கு இணையானது ?
அசட்டுத்தனம்.

17. விலை மதிப்பற்றதென எதைக் குறிப்பிடலாம் ?
காலமறிந்து செய்யும் உதவி.

18. இறக்கும் வரை உறுத்துவது எது ?
ரகசியமாகச் செய்த பாவம்.

19. எவரை நல்வழிப்படுத்துவது கடினம் ?
துஷ்டர்கள், எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள், சோகத்திலேயே சுழல்பவர்கள், நன்றி கெட்டவர்கள்... ஆகியோர் !

20. சாது என்பவர் யார் ?
ஒழுக்கமான நடத்தை உள்ளவர்.

21. உலகத்தை யாரால் வெல்ல முடியும் ?
சத்தியமும், பொறுமையும் உள்ளவரால்.

22. யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர் ?
எல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை.

23. செவிடன் யார் ?
நல்லதைக்கேட்காதவன்.

24. ஊமை யார் ?
சரியான சந்தர்ப்பங்களில் தகுந்த இனிமையான
சொற்களைச் சொல்லத் தெரியாதவன்.

25. நண்பன் யார் ?
பாவ வழியில் போகாமல் தடுப்பவன்.

26. யாரை விபத்துகள் அணுகாது ?
மூத்தோர் சொல் கேட்டு நடப்பவனையும், அடக்கமுள்ளவனையும்.

திருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள்.

திருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள்.

திருச்செந்தூரில் ஒரு தினஉபவாச விரதம் இராதவர் யாவராகினும் அவர் ஜனனம் முதல் மரணம் வரை தவம் செய்தாலும் யாதொரு பலனையும் அடையத்தகுந்த மார்க்கமில்லை.

1. திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள்.

2. திருச்செந்தூரில் வீரவாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார். இதனால் இத்தலத்துக்கு வீரவாகு பட்டினம் என்றும் ஒரு பெயர் உண்டு.

3. திருச்செந்தூர் தலத்தில் தினமும் வீரவாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜை நடத்தப்படுகிறது.

4. மூலவர் பாலசுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையே அணிவிக்கப்படுகிறது. சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படும்.

5. மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை உள்ளது. ரூ.5 கட்டணம் செலுத்தி உள்ளே சென்றால் முருகன் பூசித்த பஞ்சலிங்கங்களைக் காணலாம். இந்த அறைக்கு பாம்பறை என்றும் ஒரு பெயர் உண்டு.

6. திருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும்.

7. திருச்செந்தூர் தலத்தில் சண்முகர், ஜெயந்தி நாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்சவர்கள் உள்ளனர். இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கிறார்கள்.

8. திருச்செந்தூர் கோவில் கோபுரம் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அடுக்குகளை கொண்ட இந்த கோபுரம் 157 அடி உயரம் கொண்டது.

9. திருச்செந்தூர் முருகனே போற்றி என்ற தலைப்பில் அருணகிரி நாதர் 83-திருப்புகழ் பாடி உள்ளார். இந்த பாடல்களை பக்தி சிரத்தையுடன் பாடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

10. திருச்செந்தூர் கோவில் வடிவம், பிரணவ மந்திரமான ஓம் எனும் வடிவில் அமைந்துள்ளது.

11. மூலவருக்கு பக்தர்கள் கட்டணம் செலுத்தி தங்க அங்கி அணிவித்து வழிபடலாம். இந்த வழிபாட்டின் போது முருகருக்கும், பரிகார தெய்வங்களுக்கும் தங்க அங்கி, வைர வேல் அணிவிக்கப்படும்.

12. திருச்செந்தூர் கோவிலில் உள்ள சண்முக விலாசம் எனும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதை தாங்குகின்றன.

13. திருச்செந்தூர் கோவில் மூலவர் முன் உள்ள இடம் மணியடி எனப்படுகிறது. இங்கு நின்று பாலசுப்பிரமணியரை தரிசிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

14. நாழிக்கிணறு 24 அடி ஆழத்தில் உள்ளது. இங்கு நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும் என்பது ஐதீகம்.

15. திருச்செந்தூர் கோவில் திருப்பணிக்காக மவுனசாமி, காசிநாத சுவாமி, ஆறுமுகசாமி மூவரும் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தனர். அவர்களது சமாதி நாழிக்கிணறு அருகே உள்ளது.

16. தமிழகத்தில் முதன் முதலில் நாகரீகம் தோன்றிய நகரங்களுள் திருச்செந்தூரும் ஒன்று.

17. முருகப் பெருமானோடு போரிட்ட படை வீரர்கள் அய்யனார்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

18. திருச்செந்தூர் கோவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிலைபெற்று இருப்பதாக வரலாற்று ஏடுகள் கூறுகின்றன.

19. இத்திருத்தலம் மன்னார் வளைகுடாக் கடலின் கரையோரத்தில், அலைகள் தழுவ அமைந்திருப்பதால், அலைவாய் என்று அழைக்கப்பட்டது. பின்னர், திரு என்றும் அடைமொழி சேர்க்கப்பட்டு, ‘திருச்சீரலைவாய்’ என்று அழைக்கப்படுகின்றது.

20. இக்கோயிலுக்குச் செல்லும் வழியில், தூண்டுகை விநாயகர் கோவில் உள்ளது. இவ்விநாயகரை வணங்கிய பின்னர்தான் முருகப் பெருமானை வணங்கச் செல்ல வேண்டும்.




21. இத்திருக்கோயிலில் பன்னிரு சித்தர்களில் எட்டுச் சித்தர்கள் சமாதியாகி உள்ளதாகக் கூறப்படுகின்றது.

22. முருகப்பெருமானின் வெற்றி வேல் மாமரமாக மாறி நின்ற சூரபத்மனை பிளவுபடுத்திய இடம் திருச்செந்தூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில், கடற்கரை ஓரமாக உள்ள மாப்பாடு என்ற இடம் ஆகும். இப்பகுதி தற்போது, மணப்பாடு என்று அழைக்கப்படுகின்றது.

23. அலைவாய், திரச்சீரலைவாய், வெற்றி நகர், வியாழ சேத்திரம், அலைவாய்ச் சேறல், செந்தில், திரிபுவளமாதேவி சதுர்வேதி மங்கலம், சிந்துபுரம், ஜெயந்திபுரம், வீரவாகு பட்டி னம், என்றெல்லாம் திருச்செந்தூர் முன்பு அழைக்கப்பட்டது.

24. முருகனின் அறுபடை வீடுகளில் இது 2-வது படை வீடு எனப்படுகிறது. ஆனால் இதுதான் முதல் படை வீடு என்ற குறிப்புகளும் உள்ள.ன

25. முருகனின் அவதார நோக்கமே அசுரர்களை அழிப்பதுதான். திருச்செந்தூரில்தான் அந்த அவதார நோக்கம் பூர்த்தியானது. எனவே முருகனின் தலங்களில் திருச்செந்தூர் தலமே தெய்வீக சிறப்பும், தனித்துவமும் கொண்டதாகும்.

26. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மிகப்பெரிய கோவில் கொண்ட தலம் என்ற சிறப்பும் திருச்செந்தூர் கோவிலுக்கு உண்டு.

27. முருகன் சிவந்த நிறம் உடையவன். அவன் உறைந்துள்ள தலம் என்பதால்தான் இத்தலத்துக்கு செந்தில் என்ற பெயர் ஏற்பட்டது.

28. திருச்செந்தூர் ஊர் மத்தியில் சிவப்கொழுந்தீசுவரர் கோவில் உள்ளது. இதுதான் ஆதிமுருகன் கோவில் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

29. கிறிஸ்தவ மீனவர்கள் திருச்செந்தூர் முருகனை உறவுமுறை சொல்லி அழைக்கிறார்கள். திருச்செந்தூர் கோவில் திருப்பணிகளுக்கு காயல்பட்டினத்தில் வசித்த சீதக்காதி எனும் வள்ளல் நன்கொடை அளித்துள்ளார். எனவே திருச்செந்தூர் முருகன் ஆலயம் சமய ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.

30. அருணகிரி நாதர் தன் பாடல்களில் பல இடங்களில் திருச்செந்தூரை குறிப்பிட்டுள்ளார். அவர் திருச்செந்தூரை மகா புனிதம் தங்கும் செந்தில் என்று போற்றியுள்ளார்.

31. திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரம் வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானை திருமண நாளில் மட்டுமே அந்த வாசல் திறக்கப்படும்.

32. திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் விசுவரூப தரிசனம் எனும் நிர்மால்ய பூஜையே மிக, மிக முக்கியமான பூஜையாகும்.

33. குமரகுருபரர், பகழிக் கூத்தர், ஆதி சங்கரர், உக்கிரபாண்டியனின் மகள் உள்பட ஏராளமானவர்கள் திருச்செந்தூர் முருகனின் நேரடி அருள் பெற்றனர்.

34. முருகன், மால், ரங்கநாதப் பெருமாள் ஆகிய சைவ, வைணவ மூர்த்தங்கள் இத்தலத்தில் உள்ளன.

35. செந்திலாண்டவருக்கு ஆறுமுக நயினார் என்றும் பெயர் உள்ளது. திருச்செந்தூர் தாலுகா பகுதியில் வாழும் பலருக்கு நயினார் எனும் பெயர் சூட்டப்பட்டிருப்பதை காணலாம். இசுலாமியரும் நயினார் எனும் பெயர் சூட்டிக் கொண்டுள்ளனர்.

36. வீரபாண்டிய கட்ட பொம்மனும் அவர் மனைவி சக்கம்மாவும் செந்திலாண்டவருக்கு ஏராளமான தங்க நகைகள் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.

37. மூலவர் தவக் கோலத்தில் இருப்பதால் காரம், புளி ஆகியன பிரசாதத்தில் சேர்க்கப்படுவதில்லை. ஆனால் சண்முகருக்குரிய பிரசாதங்களில் காரம், புளி உண்டு.

38. முருகனுக்கு படைக்கப்படும் நிவேதனப் பொருள்களில் சிறுபருப்புக் கஞ்சி, பால்கோவா, வடை, சர்க்கரை பொங்கல், கல்கண்டு, «பரீச்சம் பழம், பொரி, தோசை, சுகியன், தேன் குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகியன இடம் பெறுகின்றன.

39. உச்சிக்கால பூஜைக்கு முன் இலை போட்டுச் சோறு, மோர்க் குழம்பு, பருப்புப் பொடி, நெய், தயிர் போட்டுத் தீர்த்தம் தெளித்த பின்னரே மூலவருக்கு போற்றிகள் பூஜையை தொடங்குவார்கள்.

40. இரவு பூஜையில் பால், சுக்கு வெந்நீர், ஆகியன நிவேதனம் செய்வர்.

உஸ்மான் சாலை தெரிந்தவர்களுக்கு அந்த உஸ்மான் யார் என்று தெரியுமா?

மதராஸ்  உஸ்மான் சாலை தெரிந்தவர்களுக்கு அந்த உஸ்மான் யார் என்று தெரியுமா? இதோ.........
--------------------------------------------------
"முதல் தலைமுறை மனிதர்கள்".

மதராஸ், தி.நகரில் வணிக நிறுவனங்கள் நிறைந்த உஸ்மான் சாலைகளில் நடந்து செல்லும்போது, " யார் இந்த உஸ்மான்" என்ற கேள்வி எழுந்து, பதில் கிடைக்காமல் மூழ்கும். இன்றுதான் விடை கிடைத்தது. அந்த விபரங்களைத் திரட்ட பெரும் உழைப்பைச் சிந்தியுள்ளார் ஆசிரியர்.
ஃபிரான்ஸ் வரலாற்று ஆய்வாளர் ஜே.பி.பி. மொரேயின் "முஸ்லீம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி" என்ற நூலின் சிம்பைப் பிடித்துக்கொண்டு பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார்.

உஸ்மான் - ஒரு சுருக்கச் செய்தி : கான் பகதூர் சர் முகமது உஸ்மான்,
Khan Bagadur Sir Mohammad Usman KCSI KCIE 1884 - 1960.
பிரிட்டிஷ் இந்தியாவின் தஞ்சாவூரில் பிறப்பு, சென்னைக் கிறித்துவக் கல்லூரியிலும், சென்னைச் சட்டக் கல்லூரியிலும் பட்டம் பெற்றார்.

1913 ல் சென்னை மாநாகராட்சி உறுப்பினர், தொடர்ந்து 12 ஆண்டுகள்.
1924ல் சென்னை மாநகராட்சி மேயர்.
1916 - நீதிக்கட்சி தோற்றம் - உறுப்பினர். பின்னர் சென்னை மாகாணப் பொதுச்செயலாளராகத் தேர்வு - 1919 திருச்சி மாநாட்டுத் தலைவர்.
1920 முதல் சட்டமன்றத் தேர்தல். வெற்றி பெற்று நீதிக்கட்சி ஆட்சி அமைக்க
1934 வரை சட்டமன்ற உறுப்பினர்.
1925 முதல் நிர்வாகசபை உறுப்பினர். பின்னர் நிர்வாகசபையின் துணைத்தலைவர்.
1932 - 34 சென்னை மாகாண உள்துறை அமைச்சர்.

1934ல் சென்னை மாகாண கவர்னர், Governor of Madras Presidency - Acting.
இதன்மூலம் இந்தியமாகாணங்களிலேயே கவர்னர் பதவி வகித்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் - அத்துடன் முதல் தமிழர், முதல் முஸ்லீம் என்ற பெருமையும் கூட. அந்த வருடம் சென்னை சென்னைப் பல்கலையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார்.

சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றில் இந்தியர் ஒருவர் "வேந்தர்" என்ற தகுதியில் கலந்துகொண்ட முதல் வரலாற்று நிகழ்வு இதுவே ஆகும். பிரமிக்கத்தக்க விசயம் என்னவென்றால் தான் பட்டம்பெற்ற பல்கலையில் தானே பட்டம் வழங்கும் நிலைக்கு உயர்ந்த உழைப்புதான்.

1941ல் பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினர், Member of Defence Council of India.
1942ல் வைஸ்ராயின் நிர்வாகக் குழு உறுப்பினர்,
Member of the Executive Council of Viceroy of India. இக்குழுவில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சர் சி.பி.இராமசாமி ஐயர் உள்ளிட்ட 19 உறுப்பினர்கள் இருந்தனர்.

1920 ல் கான் சாகிப் பட்டம்.
1921 ல் கான் பகதூர் பட்டம்.
1925ல் கெய்ஸர் இ ஹிந்த் வெள்ளிப் பதக்கம்.
1928 ல் இங்லாந்தின் உயரிய "நைட் - Knight " விருது.
அதே ஆண்டில் "சர் - Sir" பட்டம்.

KCSI - Most exalted Order of the Star of India, Knight Commander Order of
           Chivalry - Founded by Queen Victoria in 1861.

இதுபோல் தமிழகத்தின் 30 ஆழுமைகளைத் தேர்ந்தெடுத்து, தமிழக வரலாற்றின் தவிர்க்க இயலாச் சக்திகளாகவும் சுதந்திரப் போராட்ட வீரர்களாகவும் இருந்து, வெளியுலகிற்கு அறியப்படாத ஆற்றல்மிகு தியாகிகளின் பங்களிப்புகளைத் தொகுத்திருக்கிறார்.

Thanks for the information:
வெளியீடு : நிலவொளி பதிப்பகம், சென்னை.

Wednesday, January 16, 2019